(Reading time: 17 - 33 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 26 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

ழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு எனஇரண்டு கட்டமாக நடைபெற்ற வளாகத் தேர்வில் தேர்வாகிய ரம்யாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. அந்த சமயம் எல்லாரும் பெரிதும் கொண்டாடிய ஐடி பணி அது, சாப்ட்வேர் இஞ்சினியர் என்னும் பதவி, டெக்னோசிஸ் என்னும் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பணி, மேலும்  ஆரம்பத்தில் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், பின்னர் பணி நிரந்தரமானதும் ஐந்திலக்க சம்பளம் என்றெல்லாம் ரம்யாவின் மனதிலேயே புரிபடாத வார்த்தைகளை சுற்றி எல்லாரும் பேசிக்கொண்டே அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அது ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால் வெளிநாட்டில் போய் வேலைபார்க்கும் வாய்ப்பெல்லாம் கிடைக்கும்  என்று நினைத்த அப்பாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. கல்லூரியில் நிறுவனம் கொடுத்த தகவல்களை அறிந்து கொண்டதும், முகம் நிறைவுற, பேருந்து நிலையம் வந்தனர். அந்நேரத்திலும் மதுரை பரபரப்பாகவே இருந்தது. தூங்க நகரம் அல்லவா. ஒரு ஓட்டலின் வாயிலில் இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்தில் நுழைந்த அப்பா, அம்மாவிடம் தொலைபேசியில் தகவலை சொல்லிவிட்டு, அம்மாகிட்ட பேசு என்று கொடுத்து விட்டு அருகில் இருந்த ஸ்வீட் கடைக்குள் நுழைந்தார். அப்பா அங்கே ஸ்வீட் வாங்கிக் கொண்டிருந்த நேரம். அம்மாவிடம் பேசிவிட்டு வைத்தவள், படுவேகமாக தினேஷின் வீட்டுக்குப் போன்  கால் செய்தாள். அவன் தூங்காமல் இருக்க வேண்டும், டக்கென்று போனை எடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டே ரிசீவரோடு கண்ணை, அப்பாவின் திசையில் ஓட்டினாள். அப்பாவின் கவனம் ஸ்வீட்டில் இருக்க, எதிர்முனையில், அவன் குரல் கேட்கவும், “தினேஷ் எனக்கு டெக்னோசிஸ் கம்பெனில வேலை கிடைச்சுருச்சுடா! என்றாள். “ஹே! சூப்பர்டி முட்டக்கண்ணி! உன்னையைத் தான் நினைச்சிட்டே இருந்தேன். தூக்கமே வரல. வேலை கிடைக்குமோ கிடைக்காதோன்னு ஒரே யோசனை. இனி கொஞ்ச காலம் உங்க வீட்டுல உன்  கல்யாணம் பத்தி யோசிக்கமாட்டாங்க. கையில் வேலை மட்டும் இல்லைனா, நீ படிச்சி முடிக்கவும், கல்யாணப் பேச்சை எடுப்பாங்க. நான் செட்டில் ஆகிறவரைக்கும் கொஞ்சம் டைம் வேணும்னு யோசிச்சிட்டு இருந்தேன். நல்லவேளையா  நீ முதலில் நல்லபடியா சூப்பரான கம்பெனில வேலை வாங்கிட்ட. நான் இன்னிக்கு ரொம்ப நிம்மதியா தூங்கப் போறேன்!எனவும் “சரிடா. வச்சிறேன்!. அப்பா வர்றாங்க!” என்றவள் வைத்துவிட்டாள். ஸ்வீட்டுக்கும் போன் பேசியதற்கும் பணம் கொடுத்துவிட்டு  அப்பா வரவும், ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினர். நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தவள், தினேஷின் குரல் கேட்ட மகிழ்வில் நிம்மதியாக உறங்கினாள்.

இறுதி ஆண்டு. இறுதி செமெஸ்டர். ப்ராஜெக்ட் பண்ண வேண்டியிருந்தது. இரண்டே இரண்டு தியரி பேப்பர்கள் மட்டும் தான் என்பதால் வகுப்புகள் குறைவுதான். ப்ராஜக்ட் என்னவென்று

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

9 comments

  • :thnkx: தோழி! அவர்களின் பொறுமைக்கும், முயற்சிக்கும் நிச்சயம் நல்லதே நடக்கும் கிடைக்கும் :-)
  • :thnkx: தோழி! கிளைமாக்ஸ் விரைவில் !
  • ஆர்வத்துடன் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. பாகம் ஒன்று நீங்கள் சில்சீ தளத்தில் படிக்கலாம்! :thnkx: தோழி
  • [quote name=&quot;Priyankamanikandan&quot;]I am first super mam iokk part 1 re run pannugalen nan athai patikkala please[/quote]<br />Hai Priyanaka, you can read the first part @chillzeekimo.
  • Gives a nostalgic feel 😍😍😍 nice update ma'am 👏👏👏👏👏👏👏 Ramya oru mudivodu irukanga 👌 hope dinesh also finds a job soon and get settled in life...<br />Parents-i eppadi samadhika vaipanga nu parka curious aga iruken ma'am :yes: <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.