(Reading time: 7 - 14 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

எப்படிப்பா...அன்னம்மாவைத் தொட்டு....கெடுத்து...அவ வயித்துல ஒரு குழந்தையையும் குடுத்தே?” கேட்டு விட்டு உடனே லைன் கட்டானது.

“திக்”கென்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தான் மனோகரன்.  “யார் இவன்?...யார் இவன்?...இவனுக்கு எப்படி எல்லா விஷயங்களும் தெரிஞ்சிருக்கு?” படபடப்பானான்.

“விடு...விடு”வென்று அங்கிருந்து நகர்ந்து, “டேய்...பங்காளிகளா...நான் கிளம்பறேன்...நீங்க இருந்திட்டு வாங்க” சொல்லி விட்டு அதே வேகத்தில் சென்று தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கிப் பறந்தான்.

அவனுக்காகவே வீட்டு வாசலில் காத்திருந்த அவன் மனைவி சரஸ்வதி, “ஏங்க நேத்திக்கு ராத்திரியிலிருந்து உங்க தங்கச்சியைக் காணோம்ங்க” பதட்டமாய் ஓடி வந்து சொன்னாள்.

ஏற்கனவே கடும் மன உளைச்சலிலிருந்த மனோகரன், இன்னும் அதிகமாய் அதிர்ந்தான்.  “எ...என்னடி சொல்றே?”

“காலையில் எப்பவும் ஏழு மணிக்கு எந்திரிச்சு வெளிய வர்றவ இன்னிக்கு ஒம்பது மணியாகியும் வெளிய வரலை!...ஒரு சந்தேகத்தோட உள்ளார போய்ப் பார்த்தேன்!...ஆளைக் காணோம்!...” இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டிச் சொன்னாள் சரஸ்வதி.

“எல்லாப் பக்கமும் நல்லாத் தேடிப் பார்த்தியா?...அவ தோழிக வீட்டிலெல்லாம் விசாரிச்சியா?”

“எல்லாம் பண்ணிப் பார்த்திட்டேங்க...ம்ஹ்ஹும்...அவ எங்க போனா?ன்னே தெரியலை” என்றாள் சரஸ்வதி.

“ஒரு வேளை...அந்த பொள்ளாச்சிக்காரப் பயலோட ஓடியிருப்பாளா?” மனோகரன் தன் சந்தேகத்தைச் சொல்ல,

“இல்லையே...அன்னிக்கு நீங்க மிரட்டி விட்டதுக்குப் பிறகு அந்தப் பையனும் மட்த்துக்குளம் பக்கம் வரலை!...இவளும் பொள்ளாச்சிப் பக்கம் போகலை!...”

“போன்ல பேசித் திட்டம் போட்டிருக்கலாமல்ல?” என்றான் மனோகரன்.

“அதுக்கும் வாய்ப்பில்லைங்க!...நாம அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறோம்!ன்னு நான் சொன்னதுக்கு அவ சந்தோஷமா “சரி”ன்னு சொன்னாளே?” சரஸ்வதி சொல்ல,

“ஹும்...நடிச்சிருக்கா...நடிச்சு...நம்மை நம்ப வெச்சு கழுத்தறுத்திருக்கா” பற்களை “நற...நற”வென்று கடித்தான் மனோகரன்.

அப்போது மனோகரன் மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பேசினான்.  “என்ன மனோகரா வாட்ஸ் அப்ல...ஒரு வீடியோ அனுப்பியிருந்தேன் இன்னும் பார்க்கலையா?...சீக்கிரம் பாரு...அதுல உனக்கு இன்னோரு அதிர்ச்சியிருக்கு” சொல்லி முடித்ததும் லைன் கட்டானது.

அவசர அவசரமாய் வீடியோவைப் பார்த்தான்.

கையில் மண்ணெண்ணைக் கேனுடன் நடந்து, மாட்டுத் தொழுவத்துக்குப் பக்கத்தில் நின்று,

2 comments

  • Saraswathi pongi ezhamal maushan purushan stone grass sollitu chapter close panitangale steam yen pulli wedding kku pogalai :Q: adutha Marketing sketch poda start panitaro??? Nice epi sir 👏 👏👏👏👏<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.