“கல்லானாலும் கணவன்...புல்லானாலும் புருஷன்” என்கிற வம்சத்தில் வந்த தமிழ்ப் பெண்ணான சரஸ்வதி, “வேண்டாங்க!...நீங்க யாரு?...எவர்?ன்னு எனக்குத் தெரியாது...ஆனாலும் உங்களை என்னோட அண்ணனா நெனச்சுக் கேட்கறேன்....எனக்குத் தாலிப் பிச்சை போடுங்க அய்யா...அவரு தவறான மனுஷந்தான்...ஆனாலும் என் புருஷன்” கெஞ்சினாள்.
“நான் இந்த வீடியோவை அப்படியே மறைச்சு உன் புருஷனைக் காப்பாத்தணும்ன்னா...”
“சொல்லுங்கய்யா...நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்”
“உன் புருஷனோட தங்கச்சியை அவ காதலிக்கற அந்தப் பொள்ளாச்சி பையனுக்கே கல்யாணம் செஞ்சு வைக்க நீ ஏற்பாடு பண்ணனும்!...ஒரு கண்டிஷன்...இதை நீயே செய்யற மாதிரி செய்யணும்!...நான் சொல்லி செஞ்சதா இருக்கக் கூடாது...என்ன?!...நாளைக்கு காலைல உன் புருஷனோட தங்கச்சி உங்க வீட்டுக்கு வருவா...அவளை எதுவும் கேட்காம...வீட்டுக்குள்ளார சேர்த்துக்கிட்டு..ஒரே வாரத்துல அவ கல்யாணத்தையும் முடிச்சிடணும்!...என்ன முடியுமா?”
“என் புருஷன் கழுத்துக்கு தூக்குக் கயிறு வராம இருக்க...நான் எதுவும் செய்யத் தயார் அய்யா”
சட்டென்று இணைப்பு அறுந்தது.
****
மனதில் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டி, ரம்யாவை அவள் வீட்டிற்கும், ராஜேஸை அவன் வீட்டிற்கும் அனுப்பி வைத்தான் ரவீந்தர்.
அவன் எதிர்பார்த்த்து போலவே, அடுத்த வாரத்திலேயே அவர்கள் திருமணம் இனிதே நடந்தேறியது.
அழைப்பு வந்திருந்தும் ஏனோ ரவீந்தர் அந்த திருமணத்திற்குச் செல்லவில்லை.
தொடரும்...
Next episode will be published on 7th May. This series is updated weekly on Fridays.