சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தன.
திடீரென்று தலையை ஆவேசம் வந்தவர் போல் சிலுப்பிய நம்பூதிரி ஒருவித ஆக்ரோஷக் கனைப்புடன் கண்களைத் திறந்து “அவ்வளவுதான்!” என்றார்.
ஏற்கனவே தன் மேலதிகாரிகளுக்கும் சக அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியிருந்த ஏ.சி.தீனதயாள் அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.
திடீரென நுழைந்த மீடியாக்காரர்களும் பத்திரிக்கைக்காரர்களும் தங்கள் வீடியோ மற்றும் ஸ்டில் காமிராக்களில் இடித்துத் தள்ளப்பட்டிருந்த சுவர்களையும் குவித்து வைக்கப் பட்டிருந்த எலும்புக் கூடுகளையும் படமெடுத்துத் தள்ளினர்.
சிலர் ஏ.சி.தீனதயாளனின் அருகில் வந்து பேட்டியெடுக்க முயல கோபமானார் அவர். “யாரு...யாரு உங்களையெல்லாம் உள்ளார விட்டது?” கத்தினார்.
“சார்....! வீ ஆர் பிரஸ் பீப்பிள்...எங்களுக்கு எங்கும் போக வர...யாரையும் பேட்டியெடுக்க உரிமையிருக்கு!”
அந்த நேரத்தில்...அந்த இடத்தில் பிரஸ்காரர்களிடம் கோபத்தைக் காட்டி வாய் பேசினால் அது தான் சார்ந்த காவல்துறைக்கே ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்த ஏ.சி. மெல்ல தன் குரலைத் தணித்துக் கொண்டு “ஸீ...இப்ப நாங்க இப்ப இந்தப் பிரச்சினையின் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கோம்!...அதனால...இப்போதைக்கு எதையும் யூகித்துச் சொல்ல முடியாது!...ப்ளீஸ்...எங்களைத் தொந்தரவு செய்யாதீங்க!”
அப்போது அவரைக் காப்பாற்றும் விதமாய் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து சேர
பிரஸ் ஆட்களிடமிருந்து நழுவினார் ஏ.சி.
****
மறுநாள் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அந்தச் செய்தியே தலைப்புச் செய்தியாய் விரிந்திருந்தது.
“விஸ்வா டவர்ஸில் பிணக் குவியல்!”
“அடுக்கடுக்காய் எலும்புக் கூடுகள்!”
“ஆவி வேலையா?..ஆசாமிகள் வேலையா?”
பல விதமான ஹேஸ்யங்களை பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் பட்டியலிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்
கமிஷனர் அலுவலகத்தில் கூட்டப்பட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் அனல் பறந்தது. கமிஷனர் கோடை வெயிலாய்க் கொதித்துக் கொண்டிருந்தார்.
“என்ன மிஸ்டர் தீனதயாள்...செவுத்துக்குள்ளார பூராவும் செங்கற்களுக்குப் பதிலாக மனித உடல்களை வெச்சுக் கட்டியிருக்காங்களே?...என்ன...என்ன நடக்குது இங்கே?....நீங்கெல்லாம்