(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 10 - விஜேஜி

"நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன், அப்பறம் பேசலாம்" என்று அவன் அப்பாவை பார்த்து ஜாடை காட்டிவிட்டு நகர்ந்தான், கூடவே ஜாஃபரும், நிக்கத்தும் நகர்ந்தார்கள்.
"ஏய் எங்க போறீங்க எல்லாரும்?? என்ன ஆச்சு ஆதூ அவங்க ஏன் வெளியே போயிட்டாங்க ?"

அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து தன் மனைவியின் கையை எடுத்து  தன் கையில் வைத்து அவளையே உற்று பார்த்தான், ஒரு குறுநகையுடன்.

"என்ன ஆதூ, சிரிக்கற? என்ன அது குட் நியூஸ்?"

"என் நேரத்தை பாத்தியா? எல்லா ஆண்களுக்கும், பெண்கள் தான் குட் நியூஸ் சொல்லுவாங்க, என் நேரம் நான் உனக்கு சொல்ல வேண்டியதாயிருக்கு."

"அது சரி முதல்ல அத சொல்லு, இப்போ கை வலியோட கூட, இந்த தல வேற வெடிச்சுடும் போல இருக்கு."

"ஐயோ இந்த மாதிரி நேரத்துல இப்படிலாம் பேசக்கூடாதுடா... நம்மோட  முதல் குழந்தைக்குத்தான்  எனக்கு ஒண்ணுமே தெரியல, உன்னை

அப்படி தவிக்க விட்டேன், இந்த முறை நான் உன்ன அப்படிலாம் விட மாட்டேன் தனம்!"

'என்ன உளர்ற ஆதூ?"

"நான் உளறல தனம், டாக்டர் சொன்னதத் தான் நான் சொல்றேன். "

"நம்ம மகன் கேட்டதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான், அவனுக்கு ஒரு தங்கை வேணும்னு, இந்த அப்பா கிட்ட கேட்டா செய்யமாட்டேனா?இப்போ அவன் படு சந்தோஷத்துல இருக்கான்." என்று காலரை தூக்கிக் கொண்டான். "

"வெட்கமாமாயில்ல ஆதூ, அவன் வயசு வந்த பையன், அவன் இருக்கும்போது நம்மோட... ச்சீ எனக்கு.... அவன் முகத்தை எப்படி பார்ப்பேன் ஆதூ? ஐயோ !" என்று வெட்கம், சந்தோஷம் எல்லாத்தையும் அவள் முகத்தில் கொண்டு வந்தாள்.

"உனக்கு சந்தோஷமில்லையாடா?"

"சந்தோஷம் இருக்கட்டும், அஜயோட முகத்தை எப்படி பார்ப்பேன் ஆதூ? இவ்வளோ பெரிய பையன கூட வச்சுண்டு.... ஓ நோ! ..... இப்ப என்ன  பண்ணுவேன் நான் ?"

 

"கங்கிராட்ஸ் அம்மா, அப்பா!" என்று அவர்களை வாழ்த்திக் கொண்டு உள்ளே வந்தான், அஜய் , அவள் தன் கையை அப்துலிடமிருந்து இழுத்துக் கொண்டாள். ஆனால் அப்துல் மறுபடியும் அவள் கையை தன் கையோடு இணைத்து கெட்டியாக பிடித்துக் கொண்டான். அவள், தன் மகனின் முகத்தை பார்க்க வெட்கப் பட்டாள்...

"என்னம்மா ஒரு தேங்க்ஸ் கிடையாதா?" என்று அவளை வம்புக்கிழுத்தான், அஜய்.

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.