நிக்கத்திற்கும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று சொல்லி உடனே அடுத்த நாளே கிளம்புவதற்கு ஏற்பாடு செய்தனர். அஜய்யும் நிற்க்கத்தும். பேக் செய்து கொண்டார்கள் கடையில் இருந்து வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிக் கொண்டார் நிக்கத்.
அஜய் தன் அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லாமல் நிக்கத்தும், அஜய்யும் சென்றார்கள்.
அஜயும், நிக்கதும் கேப் எடுத்துக்கொண்டு, தனது வீட்டு வாசலில் இறங்கி பெல் அடித்தார்கள். கதவைத் திறந்ததும் ஆச்சரியமானாள். அப்படியே நிக்கத்தையும் அஜயையும் அணைத்துக் கொண்டு" வா" என்று கண்ணிலிருந்து கண்ணீர் ஆனந்தக் கண்ணீரரோடு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்று தான் நினைச்சேன் எப்படி நீங்க இன்னிக்கே வந்துட்டீங்க?
அதுதான் மா டெலிபதி, நீ என்ன நெனச்ச இருக்கேன்னு, எனக்கு தெரிந்தது. அதான் பறந்து வந்துட்டேன்.
"ரொம்ப சந்தோஷம், அஜய் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் நான்."
"நானும் தான் அம்மா அதான் நினைச்ச உடனே பறந்துட்டேன்."
தனம் கண்ணில் கண்ணீருடன் ,"ரொம்ப தேங்க்ஸ் அஜய் வந்ததுக்கு, ஆன்ட்டி உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் உங்களையும் ரொம்ப மிஸ் பண்ணினேன்."
தனத்தின் வயிற்றில் கைவைத்து "என் தங்கப் பாப்பா என்ன சொல்றா அம்மா?" என்று கேட்டான்.
"அஜய் அண்ணா எப்ப வருவான் என்று கேட்டுண்டு இருக்கா?"
"எனக்கும் கேட்டது அதுதான் ஓடி வந்துட்டேன்."
"என் செல்லம்!!" என்று அவன் கண்ணத்தை வழித்து முத்தம் கொடுத்தாள், தனம்.
" எங்கம்மா யாரையுமே காணோம் நீ மட்டும்தான் இருக்கியா வீட்டில?"
"ஆமாம் அஜய், அப்பா வேலைக்கு போய் இருக்கிறார், பசங்க ஸ்கூலுக்கு போய் இருக்காங்க என்னுடைய டுயூ டேட் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதான் வீட்ல இருந்து வேலை பண்ணிட்டு இருக்கேன்."
"குட்மா ஆனா தனியாவா இருக்க?"
இல்ல அஜய், ஹெல்ப்புக்கு ஒரு லேடி வெச்சிருக்கோம், அவங்க கடைக்கு போவாங்க குழந்தைகளை ஸ்கூலில் இருந்து கூட்டி கொண்டு வருவாங்க, ஸ்விம்மிங் கிளாஸ் கூட்டிட்டு போவாங்க, எல்லா ஹெல்பும் செய்வாங்க."
" உள்ள வாங்க ஆன்ட்டி குளிச்சிட்டு வாங்க அப்புறம் சாப்பிடலாம், கிடுகிடுன்னு எல்லாம் ரெடி பண்ணிட்டு வாங்க!"