(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"நீ ரெஸ்ட் எடு தனம் குளிச்சிட்டு வந்து நானே எல்லாம் செய்யறேன், என்றார் நிக்கத்."

"என்ன ஆன்ட்டி இது இப்பதான் வந்து இருக்கீங்க, எப்படியும் நான்  எல்லோருக்கும்  செய்யறேன்."

"தனம் இனி உனக்கு ரெஸ்ட். சமையலறையை நான் பாத்துக்குறேன்."

"சரி ஆன்ட்டி முதல்ல நீங்க குளிச்சிட்டு வாங்க."

சிறிது நேரத்தில் "ஆஆஆஆ"என்று தனம்

முனகினாள்

அஜய் ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டு "என்ன ஆச்சும்மா?" என்று கேட்டான்

"உன் தங்கைக்கு நீ வந்த குஷி என்னை பயங்கரமா உதைக்கிறாள்."

அவன் சிரித்துக்க்கொண்டே  ஹேய், குட்டி பாப்பா, அம்மாவை தொந்தரவு பண்ண கூடாது, " என்று மிரட்டும் பாவனையில் கூறினான்.

அவள் தன் ஆசை மகனே அணைத்துக் கொண்டு மெதுவாக சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

வேலை செய்யும் பெண் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அதை கிடுகிடுவென்று செய்து முடித்தாள்.

அஜய்யும் நிக்கதும், தனமும், உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேலை செய்யும் பெண் காரை எடுத்துக் கொண்டு போய் இம்ரானையும், சாய்ராவையும் அழைத்துக்க்கொண்டு, வந்தாள்.

உள்ளே வந்ததும் இம்ரானும், சாய்ராவும் நிக்கத்தை அணைத்துக்கொண்டனர், கண்ணில் நீரோடு.

அங்கிருந்த எல்லோர் கண்ணிலும் நீர் சுரந்தது.

"கண்ணுங்களா எப்படி இருக்கீங்க?"என்ற நிக்கத் கேட்டார்.

"நாங்க நல்லா இருக்கோம், நீங்களும் தாதாவும் எப்படி இருக்கீங்க?"

"பையா! "என்று அஜயை, இருவரும் கட்டிக் கொண்டனர் சாய்ராவை தூக்கி கொண்டு இம்ரானை தன்னோடு அழைத்துக்கொண்டு தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, அவனுடைய பள்ளிக்கூடத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான், அஜய்.

அவர்களுடைய சம்பாஷணை தனமும் நிக்கத்தும் பார்த்து கண்டுகளித்தனர்.

சாய்ராவும் தனத்தை பார்த்து," அம்மி வாப்பாக்கு கால் செய்யுங்க!" என்று கூறியது.

"சாய்ரா, இம்ரான் இரண்டு பேரும் போயி குளிச்சுட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க, அண்ணா இங்கு தான் இருப்பார் எங்கேயும் போகமாட்டார் உங்க அண்ணா!" என்று இதமாக குழந்தைகளுக்கு கூறினாள், தனம்.

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.