தொடர்கதை - காளிங்கன் - 09 - சுபஸ்ரீ
தாயை பிரிந்த சேய் போல் செல்லாயி துவண்டு காணப்பட்டாள். நாகவனத்தில் இருந்து மீண்டு வந்த நால்வரோடு பவி மற்றும் நண்பர்கள் என அனைவரும் பள்ளி வளாகத்தில் இருந்தனர்.
செல்லாயி மனம் கபிலன் உடன் இருந்தவர்களுடன் சற்றும் ஒட்டவில்லை. தம்பி ராசுவை ஓர் அறையில் படுக்க வைத்தாள். மருந்தின் தாக்கத்தில் இருந்தவன் படுத்ததும் தூங்கி விட்டான்.
எப்படியாவது இங்கிருந்து மீண்டும் நாகவனத்திற்கு செல்ல வேண்டும் என்னும் தவிப்புடன் காணப்பட்டாள். அவளுள் இனம் புரியாத அச்சம் உண்டானது. பிரணவ் பார்வையால் அவளை தொடர்ந்தபடி இருந்தான்.
எதிலும் மனம் லயிக்கவில்லை. நாகவனம் தலைவரிடம் மன்னிப்பு கேட்டு அவன் கொடுக்கும் தண்டனையை ஏற்
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் விடுவது என் பொறுப்பு. ஆனா இப்ப அதுக்கு சரியான நேரம் இல்ல. நீ என்னுடைய தங்கை என்னை நம்பி தாராளமா வரலாம். உன்னையும் தம்பியையும் பாதுகாப்பது என் கடமை. இது சத்தியம்” நிதானமாக கபிலன் பேசினான்.