(Reading time: 5 - 10 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 27 - முகில் தினகரன்

ன்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரவீந்தர், கண்னாடி முன் நின்று தலை வாரும் போதுதான் கவனித்தான்.

“அடக் கஷ்டகாலமே...வேலை பிஸில...தலையைக் கவனிக்காம விட்டுட்டேனே?..இப்படிக் காட்டுவாசி மாதிரி தலைமுடி வளர்ந்து கிடக்கே?...ம்ஹும்...இப்பவே போய் பக்கத்திலிருக்கற சலூன் கடை ஏதாச்சிலும் கட்டிங் பண்ணியே ஆகணும்!...திடீர்னு மார்க்கெட்டிங் டூர் போகச் சொல்லிட்டாங்கன்னா...அப்புறம் கஷ்டமாயிடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் வாசல் வரை சென்று விட்டு, மீண்டும் யோசனையுடன் நின்றான்.  “ஆஹா...போயிட்டு வந்து பச்சைத் தண்ணியில் அல்லவா குளிக்கணும்!...ஏற்கனவே இந்த ஊர் ஜில்லுன்னு இருக்கு...இதுல பச்சைத் தண்ணில குளிச்சா...எனக்கு ஜுரம் வந்திடுமே?...என்ன பண்ணலாம்?”

தலைக்குள் கையை விட்டு முடியைக் கோதிப் பார்த்தான், “ம்ஹும்...வேற வழியில்லை...இன்னிக்கு முடி வெட்டியே ஆகணும்” “விறு...விறு”வென வெளியேறினான்.

“என்ன சார் இவ்வளவு சீக்கிரத்துல டிபன் சாப்பிடக் கிளம்பிட்டீங்க..” வாசலிலிருந்த துளசி செடியருகே நின்றிருந்த வத்சலா கேட்க,

“இல்லை...வேற ஒரு வேலை...அதான்”

“கோயிலுக்கா?”

“ஆஹா...சொல்லாமல் விடமாட்டாள் போலிருக்கே?”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ரவீந்தர், “சலூன் கடைக்கு ஹேர் கட் பண்ணப் போறேங்க” என்றான்.

அவன் தலையை உற்றுப் பார்த்தவள், “உங்களுக்கு நிறைய முடி இருந்தால்தான் அழகாயிருக்கு” என்றாள்.

“அட ஏங்க?...என்னைப் பார்த்தால் எனக்கே காட்டுவாசி மாதிரி இருக்கு” என்றான்.

“ஆனா எனக்கு காதல்வாசி மாதிரியல்ல தெரியுது” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், “போயிட்டு வந்து பச்சைத் தண்ணியே குளிச்சுக்குவீங்களா?...இல்லை சுடு தண்ணி வெச்சு வைக்கவா?’ கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டது ரவீந்தருக்கு உண்மையிலேயே சந்தோஷமாயிருந்தது. “சத்தியமா பச்சைத் தண்ணில குளிக்கறதுக்கு தயங்கிட்டிருந்தேன்”

“இதிலென்ன இருக்கு?...என் கிட்ட கேட்க வேண்டியதுதானே?” என்றவள்  “போயிட்டு வாங்க...நீங்க வரும் போது உங்க வாசல்ல...சுடுதண்ணி ரெடியா உட்கார்ந்திட்டிருக்கும்” என்றாள்.

சலூன் கடையில் ஏற்கனவே கஸ்தூரி அய்யா ஷேவிங் பண்ணுவதற்காக காத்திருந்தா. 

3 comments

  • Marketing puli kuzhappamal irundhal sarithan :yes: already vathsala oru interest oda irukaru ivaru marumanathai pathi pesi andha ponna adhai veramathiri angle la parthu....tap opening illamal irukanum :sad: Nice update sir 👏👏👏👏👏👏👏<br />Thank you.
  • Nice episode.. <br /><br />Mugilan sir seekiram climax ku vaanga.. 🙃🙃<br /><br />Ravindhar pair ah fast ah <br />kanula kaatunga... 🙄🙄🙄<br /><br />Waiting for next episode....

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.