ரவீந்தர் மௌனமாய் அவர் முகத்தைப் பார்த்தான்.
“எனக்காக நீங்க ஒரு பேப்பர் விளம்பரம் குடுக்கணும்!...இந்த மாதிரி... “நாலு வயசு மகன் உள்ள ஒரு இளம் விதவைக்கு மணமகன் தேவை”ன்னு!...அதுக்கு உங்க போன் நெம்பரைக் குடுத்து...நீங்களே அதை டீல் பண்ணனும்!...ச்ய்வீங்களா தம்பி?” கெஞ்சலாய்க் கேட்டார் பெரியவர்.
“ச்சே...இவரைப் போய்த் தப்பா நினைச்சிட்டோமே?” என்று தன்னைத் தானே நொந்து கொண்ட ரவீந்தர், “தாராளமாய்ச் செய்யறேனுங்க அய்யா...ஆனா...இதுல உங்க மகளுக்கும் உடன்பாடுதானே?...ஏன்னா..நான் பாட்டுக்கு எல்லாத்தையும் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொன்ன பிறகு...அவங்க “இல்லை எனக்கு இன்னொரு கல்யாணத்துல இஷடமில்லை”ன்னு சொல்லிட்டாங்கன்னா...எல்லாமே வேஸ்டாப் போயிடுமா?”கேட்டான்.
“அதுக்குத்தான் தம்பி உங்க கிட்ட வந்திருக்கேன்!...நீங்கதான் அவ கிட்டே நைச்சியமாய்ப் பேசி அவளுக்குப் புரிய வெச்சு...இன்னொரு கல்யானத்துக்கு சம்மதிக்க வைக்கணும்!”
“என்ன பெரியவரே..இவ்வளவு பெரிய பொறுப்பை என் தலை கட்டிட்டீங்க?”
“நீங்க முடியாத விஷயங்களையும் முடிச்சுக் காட்டற ஆளு”ன்னு உங்களைப் பத்தி சுதாகர்ஜி சொல்லியிருக்கார்!...அதனால் உங்களால் நிச்சயம் முடியும்” என்றார் கஸ்தூரி அய்யா.
“ஆஹா...சுதாகர்ஜி...என்னை நல்லாவே கோர்த்து விட்டிருக்கார்” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு, “சரிங்க அய்யா..நான் முயற்சி பண்றேன்” என்றான்.
அதற்குள் வீடு வந்து விட, தன் வீட்டு வாசல் படியில் ரெடியாய் இருந்த சுடுதண்ணீரை எடுத்துக் கொண்டு அமைதியாய் உள்ளே சென்றான் ரவீந்தர்.
தொடரும்...
Next episode will be published on 4th June. This series is updated weekly on Fridays.