(Reading time: 9 - 18 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

மிஸ்டர்.சுப்ரமணியராஜா...எனக்கு கொஞ்சம் அர்ஜண்ட் வேலையிருக்கு...நான் கிளம்பறேன்!...இது வெறும் என்கொயரிதானே?...நீங்க தைரியமா பதில் சொல்லுங்க!...பின்னாடி வர்றதைப் பார்த்துக்கலாம்!என்று சொல்லி விட்டு அடுத்த கணமே அங்கிருந்து தப்பித்தோடினார்.

பொறியில் அகப்பட்ட எலி போல் தவித்தார் சுப்ரமணியராஜா.

தொடர்ந்து அவருடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்த ஏ.சி.தீனதயாள் அவரிடமிருந்து எந்த வித உபயோகமான தகவலும் வராது போக “ஹூம்...சரியான கல்லுளி மங்கனா இருப்பான் போலிருக்கே!...சரி...இனி நம்ம பாணிக்குப் போக வேண்டியதுதான்!என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவர்

ம்...மிஸ்டர்.சுப்ரமணியராஜா...இது வரைக்கும் நான் உங்ககிட்ட பேசியதெல்லாம் அஃபிஸியல்!...இப்ப பேசறது..ப்யூர்லி பர்ஸனல்...நம்ம ரெண்டு பேருக்குள் மட்டுமான ஒரு ரகசிய உடன்பாடு..சொல்லி விட்டுக் கண்ணடித்தார் ஏ.சி.

மெல்ல முகம் மலர்ந்த அந்த சுப்ரமணியராஜா “சார்...நீங்க நெஜம்மாவா சொல்றீங்க?” நம்ப முடியாமல் கேட்டார்.

 “இங்க பாருங்க...நீங்க ஒரு என்.ஆர்.ஐ...என்னோட கணிப்புப்படி நீங்க ஒரு பணம் காய்ச்சி மரம்!..இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முந்தி நடந்த கிரைமைத்  துருவிக் கண்டுபிடிக்கறதுல எங்க டிபார்ட்மெண்டுக்கு எந்த லாபமுமில்லை!...சொஸைட்டில அனாவசியமா உங்க கௌரவம்தான் ஸ்பாயில் ஆயிடும்!...ஸோ...நான் இந்தக் கேஸை இத்தோட முடிச்சுக்கறேன்...அதுக்காக நீங்க என்னைக் கொஞ்சம் பெரிய அளவுல கவனிக்க வேண்டி வரும்!...என்ன சொல்றீங்க?” எந்த முகபாவத்தில் பேசினால் அந்த சுப்ரமணியராஜா நம்புவாரோ அதே முகபாவத்தில் பேசினார் ஏ.சி.தீனதயாள்.

அவர் வீசிய கல் வீண் போகவில்லைசட்டெனப் பணிந்தார் சுப்ரமணியராஜா.

இதை...இதைத்தான் சார் நான் எதிர்பர்த்தேன்...சொல்லுங்க...உங்க தேவை எல்லா?...“சியா?”...எத்தனை?”

 சில விநாடிகள் யோசிப்பது போல் நடித்த ஏ.சி. திடீரென்று வாய் விட்டுச் சிரித்தார் இதை...இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்!என்று சொல்லி விட்டு சட்டென முகத்தைக் கடூரமாக்கிக் கொண்டு

சொல்லுங்க...எதுக்கு எனக்கு பணம் குடுக்க நெனச்சீங்க?...உங்க கிட்ட எந்தத் தப்புமே இல்லேன்னா எதுக்கு பணம் குடுக்கணும்?”

திருட்டு முழி முழித்த என்.ஆர்.. அது...வந்து...என்று திணற

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.