தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 19 - முகில் தினகரன்
காவல் துறையின் அழைப்பிற்கிணங்கி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த “சுப்ரஜா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்” நிறுவனத்தின் ஓனர் சுப்ரமணியராஜா எடுத்த எடுப்பில் விசாரணைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
“வாட் ஈஸ் திஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் சார்?...இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முந்தின விஷயங்களை இப்ப வந்து விசாரிக்கறீங்க?...நோ...நோ..நோ..என்னோட லாயரைக் கன்ஸல்ட் பண்ணாம உங்களோட எந்தக் கேள்விக்கும் நான் ஆன்சர் பண்ணப் போறதில்லை!...” மிகவும் “ரஃப் அண்ட் டஃப்” டைப்பாக இருந்தார் அவர்.
“நோ ப்ராப்ளம் சார்...தாராளமா உங்க லாயரையும் வரச் சொல்லுங்க!”
அந்த சுப்ரமணியராஜா யாருடனோ மொபைலில் சன்னமான குரலில் பேசி விட்டுக் காத்திருக்க ஆரம்பித்தார்.
“என்ன சார்...வர்றாரா உங்க லாயர்?”
“ம்...வர்றார்!”
அரை மணி நேரத்தில் வந்திறங்கிய லாயர் சுரேஷ் கிட்டத்தட்ட ஒரு ரவுடி போன்ற தோற்றத்திலிருந்தார். அதற்கேற்றாற் போல் வந்ததும் வராததுமாய் “தாட்...பூட்”டென்று குதித்தார்.
ஒரு என்.ஆர்.ஐ.யின் லாயராக இருப்பவர் அப்படியெல்லாம் பில்டப் கொடுத்தால்தான் அந்த என்.அர்.ஐ.யிடம் நல்ல பெயரைப் பெற முடியும், அப்படி நல்ல பெயரைப் பெற்றால்தான் நல்ல தொகையைக் கறக்க முடியும் என்பது ஏ.சி.தீனதயாளுக்கும் தெரியும் என்பதால் அவர் பொறுமையாகவே இருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தன் லாப்டாப்பில் இருந்த முகிலனின் இறப்புக் காட்சிகளையும் கட்டிட இடிப்பின் போது எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுக் காட்சிகளையும் அந்த லாயரிடம் போட்டுக் காட்டினார் ஏ.சி.
அரண்டு போன லாயர் சுப்ரமணியராஜாவைக் கீழ்ப் பார்வை பார்த்தார்.
அதைக் கண்ட சுப்ரமணியராஜா கடுப்பாகி ஏதோ சொல்ல வாயெடுக்க அவரிக் கையமர்த்திய ஏ.சி.
“த பாருங்க எங்க டிபார்ட்மெண்ட்டைப் பொறுத்த வரையில் எங்க விசாரணை எப்போதும் ஆட்களின் தரத்தைப் பொறுத்துத்தான் இருக்கும்!...நீங்க ஒரு என்.ஆர்.ஐ.அப்படிங்கறதினல உங்க கூட வக்கீல் இருக்க சம்மதிச்சோம்!...பட்...நீங்க ஒத்துழைக்கலேன்னா....ஸாரி டு ஸே...எங்க விசாரணையோட தொணி மாறும்...பரவாயில்லையா?”
“விருட்”டென்று தன் சேரிலிருந்து எழுந்த லாயர் சுரேஷ்