(Reading time: 6 - 11 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“ஓ...அப்படியா?...என்ன யோசனை?” தெரியாதவள் போல் கேட்டாள்.

“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது” கேட்டெ விட்டான்.

சில நிமிடங்கள் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தவள், “என்ன திடீர்னு உங்களுக்கு இந்த வத்சலா மேல் இவ்வளவு அக்கறை?” கழுத்தை அழகாய் ஒடித்துக் கொண்டு கேட்டாள்.

“இல்லை...நான் இங்க வந்த நாளிலிருந்தே...எனக்குள் இந்த எண்ணம் உண்டு!...ஆனா சொல்லத் தயக்கமா இருக்கு...இப்ப கொஞ்சம் தைரியம் வந்திருச்சு...அதான் சொல்லிட்டேன்”

அவன் தன் காதலைத்தான் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றான், என்று தவறுதலாய் எண்ணிக் கொண்டவள், “ஓ.கே...இந்த விஷயத்துல நீங்க என்ன சொன்னாலும்...இந்த வத்சலா கேட்பாள்” என்றாள்.

“நிச்சயமா?” சந்தோஷக் குரலில் கேட்டான்.

“நிச்சயமாக....உறுதியாக...ஸ்திரமாக......போதுமா?” சிரித்த முகத்துடன் கேட்டாள்.

“உண்மையிலேயே நீங்க இவ்வளவு சீக்கிரத்துல சம்மதிப்பிங்க!ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!ங்க” என்றான்.

“எதிர்பாராத விஷயங்கள்...யதார்த்தமய் நடப்பதுதான் வாழ்க்கை!...ஓ.கே...இது விஷயமா அப்பகிட்ட எப்ப பேசப் போறீங்க?...”

“இன்னிக்கே பேசிடப் போறேன்...நாளைக்கு ஈவினிங் தயாராயிருங்க...ஒரு சம்பிரதாயத்துக்காக மாப்பிள்ளை உங்க வீட்டுக்கு வரப் போறார்” என்றார்.

“நீதான் வரப் போறேன்னு எனக்குத் தெரியும் கண்ணா...வா..வா...உனக்குப் பிடிச்ச பால் பாயாஸம் பண்ணி வைக்கறேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு, “இதுக்கு மேலே செடில பூ இல்லை...அதனால் நான் கிளம்பறேன்” அழகாய்ச் சொல்லி விட்டு அமர்த்தலாய் நடந்து போனாள் வத்சலா.

அந்த மாலையும் வந்தது.  வழக்கத்தை விட சற்றும் ட்ரிம்மாக உடையணிந்து கொண்டு, கஸ்தூரி அய்யா வீட்டு வாசலுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்தினான்.

வேக வேகமாய் வாசலுக்கு வந்த கஸ்தூரி அய்யா, “வாங்க தம்பி...உட்காருங்க” என்றார்.

உள் அறையில் அழகு தேவையாய் அமர்ந்திருந்தாள் வத்சலா.

“ம்மா...இன்னிக்கு நீ கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கேம்மா” என்றான் ஆதேஷ்.

சன்னமாய்ச் சிரித்துக் கொண்டாள் வத்சலா.

“அம்மாடி...கொஞ்சம் எந்திரிச்சு வெளிய வாம்மா...நம்ம ரவீந்தர் தம்பி  வந்திருக்கார்” என்றார் கஸ்தூரி அய்யா.

“ரவீந்தர் தம்பியாம்...இந்த அப்பாவுக்கு இத்த்னை வயசாயிருக்கு இன்னும் முறை வெச்சுக்

3 comments

  • Ninaichadhu pola ivaru clean confuse panitaru..indha ponnu mind voice nalla counter kudukudhu :D anyway ravindhar avrai vida nalla varan aga than parthu iruparu ms vathsala...pesamal settle agidunga 😉😉 ivaru ungalukku set agaveeeee matter :yes: <br />Nice update sir 👏👏👏👏👏👏<br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.