Chillzee Classics - புயலுக்குப் பின்... - 04 - பிந்து வினோத்
அரவிந்தை திரும்பி பார்த்து கேள்வியுடன் நோக்கினாள் சாந்தி. ஆனால் அவனுக்கு ஏனோ மனைவியின் முகத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது!
தன்னை அருணா முன்பு அவன் ஏளனம் செய்வதாக சாந்திக்கு தோன்றியது. கணவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வீட்டுக்குள் நுழைந்தாள்.
பசி இல்லாததால் நேராக தங்கள் அறைக்கு சென்றாள், அங்கு கவிதா அயர்ந்து உறங்குவதை பார்த்தபடி நின்றாள். குழந்தையாய் இருப்பது எவ்வளவு சிறப்பு, எதை பற்றியும் கவலைபட தேவை இல்லை. அவளையும் அறியாமல் பெருமூச்சு வெளியில் வந்தது.
"என்ன மகாராணி இவ்வளவு பெரிய ... வு தெரிஞ்ச நீங்களே ஏன் எனக்கு கோபம்ன்னு கண்டு பிடிக்க வேண்டியது தானே" என்று கையை அவன் பிடியில் இருந்து உதறினாள் சாந்தி.
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் கையை விடாமல் மேலும் இறுக்கமாக பற்றியவன்,