(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 18 - முகில் தினகரன்

றுநாள் காலை கோயமுத்தூரை அடைந்ததும், தனசேகரை நேரே தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றார் தங்கவேலு.

  

“என்னங்க...யாரிந்த தம்பி?” அவர் மனைவி வடிவு கேட்க,

  

“இந்த தம்பி பேரு தனசேகர்!...வர்ற வழில ஒரு இடத்துல...வாடகைப் பணத்தோட பர்ஸை நழுவ விட்டுட்டு லாரி ஏறி போயிட்டேன் நான்!...தம்பிதான் கீழே கிடந்த பர்ஸை எடுத்துக்கிட்டு....பைக்ல...லாரியைத் துரத்திட்டு வந்து குடுத்தான்!...” என்று ஆரம்பித்து, அவனுக்கும் முரளிக்கும் உள்ள நட்பைப் பற்றியும்...அந்த நட்பால் விளைந்த சோகங்களைப் பற்றியும் மனைவியிடம் விலாவாரியாய் விவரித்தார் தங்கவேலு.

  

“அடப்பாவமே?...இப்படியும் இருப்பாங்களா?....நீங்க அந்த முரளி குடும்பத்தை இங்க கூட்டிட்டு வரும் போது அவங்க என்ன சாதி?ன்னு கேட்டு விசாரிச்சிட்டா கூட்டிட்டு வந்தீங்க?...இல்லையே?....அதே மாதிரி நானும் அவங்க என்ன சாதி?ன்னு கேட்டுட்டா அவங்களுக்கு இங்க தங்க இடம்கொடுத்து...சாப்பாடெல்லாம் போட்டேன்?...இல்லையே?....இதெல்லாம் மனுஷனுக்கு மனுஷன் செய்யற சாதாரண உபகாரங்கள்தானே?...இதுல சாதி என்ன வேண்டிக் கிடக்கு?...” படிக்காத பெண்மணியாய் இருந்த போதிலும் பகுத்தறிவோடு பேசினாள் வடிவு.

  

“த பாரு வடிவு!....இப்ப நாம செய்ய வேண்டியது என்ன?ன்னா...இதோ இந்த தம்பியையும்...நம்ம முரளியையும் சேர்த்து வைக்கணும்!..அதன் மூலமா இந்த தம்பியோட புதுப் பொண்டாட்டியை இவனோட சேர்த்து வைக்கணும்!...அவங்க எல்லோரும் இத்தனை நாள் அனுபவிச்ச கஷ்டங்களிலிருந்து விடுபடணும்!...இனிமேல் மகிழ்ச்சியா வாழணும்!...அதுதான் நமக்கு வேணும்” என்றார் தங்கவேலு.

  

அவர்களிருவரையும் அதிசயமாய்ப் பார்த்தான் தனசேகர், “இவரு...ஒரு சாதாரண லாரி டிரைவர், இந்தம்மா....ஒரு சாதாரண குடும்பத் தலைவி,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.