என்பதைப் புரிந்து கொண்டார். தனக்காக தன் மனைவியும் மகனும் சாப்பிட்டதை எண்ணி பூரித்துப் போனார்.
“ஹலோ இப்ப எதுக்கு ஒவர் எமோஷனல் . . நம்ம கேரக்டருக்கு சரி வராதுபா” என அவர் மைண்ட் வாய்ஸ் சொல்ல
“யெஸ் நீ சொல்றது சரிதான்” என தனக்கு தானே பதில் சொல்லிக் கொண்டார்.
அதற்குள் ராகவன் சாப்பிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டான். கோதாவரி “இதெல்லாம் ஐயர்ன் போட்டுடுங்க” என மூன்று புடவையும் அதன் ரவிக்கையும் கொடுத்தார். பின்பு தயாராகி அவரும் அலுவலகம் சென்றுவிட்டார்.
மகனும் மனைவியும் கிளம்பியதும் ஆர அமர அன்றைய நாளிதழில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை அனைத்தையும் படித்து முடித்தார். விளம்பரத்தைக் கூட மிச்சம் வைக்கவில்லை.
அவருக்கு செல்போனில் செய்திகளை வாசிப்பது பிடிக்காது. “கைல பேப்ரை விரிச்சி . . அதனுடைய ஒருவித வாசனை நாசியை தொட . . பேப்பர் படிக்கிறதெல்லாம் ஒரு தனி சுகம்டா” என்பார்.
பின்பு தானும் சாப்பிட்டார். ஆனந்த கண்ணீர் கண்களைக் குளமாக்கியது. சாம்பாரில் உப்பு அதிகம். இதை இருவரும் சாப்பிட்டு பாராட்டினார்களே என்று ஒருவித சந்தோஷம். இதுதான் குடும்பம் எப்பொழுதும் ‘இது சரியில்லை அது சரியில்லை என குறை கூறுவது அல்ல”.
மீண்டும் “எமோஷனலா? ஒரு சீன் போதும் . . போய் வேலைய பாரு” மைண்ட்வாய்ஸ் அறிவுரை.
விசுவும் மனைவியின் புடவை மற்றும் ரவிக்கையை அழகாக இஸ்திரி