முதன் முதலாக அவனிடம் இப்படியான ஒரு கீசெயினை பார்க்கிறார்.
“மகன் யாரையேனும் காதலிக்கிறானா? அதனால்தான் பத்மினியை வேண்டாம் என்று சொல்லிவிட்டானா? ” என மனம் பல விஷயங்களை மிக்சியில் போட்டு கிர் கிர்ரென ஒட்டியது.
மகன் அறைக்குள் சென்றார். எப்பொழுதும் போல எல்லா பொருட்களும் அழகாக நேர்த்தியாக அதன் அதன் இடத்தில் இல்லாமல் இரைந்து கிடந்தது.
இதற்கு மேல் எதையும் எண்ண இயலாமல் தன்னறைக்குச் சென்று உறங்கிவிட்டார்.
மாலை நான்கு மணிக்கு ரசித்து ருசித்து காபியைப் பருகிக் கொண்டிருக்கையில் காலிங்பெல் அடித்தது.
“நிம்மதியா காபி குடிக்க விடமாட்டாங்களே” என முணுமுணுத்தபடி கதவை திறக்க ராகவனும் கோதாவரியும் நின்றிருந்தனர்.
இருவரும் மந்தகாசமான புன்னகையுடன் உள்ளே நுழைந்தனர். “என்ன இத்தன சீக்கிரமா வந்துட்டீங்க ரெண்டு பேரும்?” விசு கேட்க
கோதாவரி அவரைப் பார்த்து கண்சிமிட்டினார். இன்ப அதிர்ச்சிக்கு ஆளானவர் “என்னடி கோதாவரி பையன் முன்னால இப்படி . . . எனக்கு வெக்கமா இருக்கு”
“அஹாஹா” என சிரித்த ராகவன் “நடத்துங்க நடத்துங்க . . நான் எதுவும் பார்க்கல” என தன் அறைக்கு்ச சென்று கதவை மூடினான்.
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படியா பையன் முன்னாடி