பேசுவீங்க” கோதாவரி கொதிக்க
“அறிவு இருந்தா கல்யாணம் செஞ்சி இப்படி ஒரு பிள்ளைய பெத்திருப்பேனா?” மனதில்தான் நினைத்தார். “நீ ஏன் கண்ணடிச்ச?”
“நல்ல கதையா இருக்கே . . கண்ணுல தூசி விழுந்தது அதுக்காக கண்ணை மூடி திறந்தா . . . ஆசைதான் கிழவனுக்கு” என்றார் கோதாவரி.
“உனக்கு வயசு ஆச்சி விசு . . . ”என சிரித்த மைண்ட்வாயிசிடம் “நீ சும்மா இருக்க மாட்டே” என்று தெரியாமல் அதனிடம் வாய்விட்டு உளற
“என்ன சொன்னீங்க?” கோதாவரி அலையாய் பாய
“கோதாவரி வேல செஞ்சி கலைப்பா வந்திருக்க . . புடவை மாத்திட்டுவா காபி கொண்டு வரேன்” என சென்று தன் ஆறிப் போன காபியை ஒருமுறை பரிதாபமாக பார்த்துவிட்டு அதை கீழே கொட்டினார்.
பின்பு மூவருக்கும் சுடச்சுட காபி போட்டுக் கொண்டு வந்தார். ஐந்து நிமிடத்தில் மூவரும் ஹாலில் ஆஜர். விசு சுர் என்று உருஞ்சும் தன் செகண்ட் இன்னிங்க்ஸ் காபியை தவிர வேறு சத்தம் இல்லை.
“அப்பா எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு” ராகவன் தன் செல்போனை நோண்டியபடி பேசினான்.
மீண்டும் விசுவின் காபியில் தடை . . குழப்பமானவர் மனைவி மற்றும் மகனை ஒரு லுக்விட்டபடி“எந்த பொண்ணுடா?” என்றார்.
“ம்ச் . . அதான்பா பத்மினி . . . பத்து நாள் முன்ன பார்த்தோமே” என்றுவிட்டு காபியை பருகினான்.
“என்னடா விளையாடுரையா? அந்த பொண்ணா?” அதிர்ந்தார்