தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 09 - சுபஸ்ரீ
விமல் அறையை விட்டு வெளியேறும் போது தனுஷின் மொத்த நிம்மதியையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டான்.
தாத்தவை விமலுடன் சந்திக்க வைக்க கூடாது என்பதில் தீவிரமாய் இருந்தான் தனுஷ்.
அடுத்த சில மணி நேரங்கள் வேலையில் கவனம் செலுத்தியவனுக்கு உலகமே மறந்தது. மாலை வீட்டை அடைந்தவன் உடைமாற்றி ஹாலில் அமர்ந்தான்.
சஞ்சய் அவன் கையில் காபி கோப்பையை கொடுத்து தானும் அருகே அமர்ந்து நிதானமாக காபியை பருகினான். அவரவர் வேலையில் லயித்திருக்க வீடே அமைதியாய் இருந்தது.
அப்போது தனுஷின் பி.ஏ. கோவிந்தன் வந்து ஒரு கவரை நீட்ட . . அதை வாங்கிய தனுஷ் கண்களால் விடை கொடுத்தான். அதை தனுஷ் பிரித்து பார்க்க
“வாவ் ஹனிமூனுகு்கு டிக்கெட்ஸ் எடுத்தாச்சா? . . . எங்க பிரோ போறதா பிளான்” என ஆர்வமாய் சஞ்சய் அதை பிடுங்காத குறையாக வாங்கிப் பார்த்தான்.
இதை கவனித்த தாத்தா “உன் கல்யாணம் முடிந்ததும் ஜெர்மனில முக்கியமான கான்பிரன்ஸ் இருக்கு நியாபகம் இருக்கா?” குத்தலாக கேட்டார்.
“எப்படி மறக்க முடியும் தாத்தா?” தனுஷ் புன்னகை மாறாமல் பதிலளித்தான்.
சஞ்சய் முகம் டிக்கெட்டை பார்த்ததும் மாறியது. “என்ன இது?” கண்களால் தனுஷை வினவ
தனுஷ் “பாட்டி இங்க வாங்க” என அழைத்தான்.
“என்னடா?” என்றபடி வெளி வந்தார்