தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 29 - நவ்யா
உமேஷிற்கு விஸ்வநாதன் தொடங்கி காருண்யா வரை எல்லா விஷயமும் தெரியும். அதனால் அவனிடம் காருண்யா பகிர்ந்தவற்றை சொல்லி விடலாம் என்று தான் ஜனனி முதலில் நினைத்தாள். ஆனால் உடனேயே மனதை மாற்றிக் கொண்டாள். காருண்யா அவளுடைய க்ளையன்ட் இல்லை, ஆயினும் அவளை நம்பி தனிப்பட்ட விபரங்களை பகிர்ந்திருக்கிறாள். அதை உமேஷிடம் கூட சொல்வது சரி கிடையாது.
ஒரே வினாடியில் முடிவை மாற்றிக் கொண்டாள் ஜனனி. அதனால், “ஒரு க்ளையன்ட் விஷயம் உமேஷ்,” என மட்டும் சொன்னாள்.
“ஓவர் சின்சியரா இருக்க ஜானி. நான் என்ன ஊரெல்லாம் போய் கிசுகிசு பரப்பவா போறேன். நீ சொல்ற க்ளையன்ட் யாருன்னு கூட எனக்குத் தெரியப் போறதில்லை. என்னன்னு என் கிட்ட சொன்னா என்ன? உன்னை அப்செட் செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஷோஃபாவில் வசதியாக அருகருகே அமர்ந்துக் கொண்டார்கள்.
“காருண்யா பர்த்டே என்ன ஆச்சு ஜானி? நாம போறோமா இல்லையா?”
“அந்தக் குடும்பத்துல எல்லோருமே டல்லா இருக்காங்க உமிஷ். இந்த தடவை பார்ட்டி வைக்கப் போறாங்களான்னே தெரியலை.”
“பணம் இருந்தா ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன். அப்படி கிடையாது போல இருக்கே. அந்தக் குடும்பத்துல பணம் கொட்டிக்