“காலையிலே மட்டும் தான் கிளீன் செய்வீங்களா?”
“இல்லை சார் சாயந்திரமும் செய்வோம்...”
“இப்போ இருக்கும் பழக்கமா இது? ரோஹினி சம்மந்தமா நான் பார்த்த போட்டோல வேற மாதிரி இருந்ததே...”
“இல்லை சார் நான் இங்கே வேலைக்கு வந்த பத்து வருஷமா வீடை இப்படி தான் பளிங்கு போல வச்சிருக்கேன்... அந்த ரோஹினி பொண்ணும் இப்படி தான் ஏதாவது சொல்லி வம்பு பண்ணிட்டே இருக்கும்... சரியான வாயாடி சார் அவ... இங்கே தங்கி இருந்த பத்து நாள்ல எங்களை எல்லாம் கேலி கிண்டல் செய்து ஒரு வழி செஞ்சுருச்சு...”
“ரோஹினி என்ன சொல்லி வம்பு செய்வா?”
“நானும் ரூபாவும் விழுந்து விழுந்து துடைச்சாலும் ஒரு சில நாள் காலையிலே வீட்டுல சின்னதா சேத்து மணல் தடம் இருக்கும்... எல்லாம் தங்கி இருந்த அந்த வாண்டுங்க வேலையா தான் இருக்கனும் வேற யார் இதெல்லாம் செய்வா, ஆனால் அதை வச்சு என்னம்மா அதுங்க பேசுங்கன்னு நினைக்குறீங்க...”
“அது போல தடம் மட்டும் தானா வேற எதுவும் இருந்தது இல்லையா?”
“ஒரு நாள் சின்ன சிகரட் துண்டு இருந்துச்சு சார்... அந்த பொண்ணு அன்னைக்கு செய்த கலாட்டா இருக்கே... அப்பப்பா... ஆனாலும் மனசுல எந்த விகல்பமும் இல்லாத பொண்ணு சார்...”
“சிகரட் துண்டா...!”
தேன் ஆர்வத்த்துடன் விஜயாவை பார்த்தான்.
தொடரும்...