ஷ்யாம் புரியாமல்,
“என்னம்மா? என்ன அனு?” என்று வினவினான்.
“இப்போ எதுக்கு அவ பேரைச் சொன்ன நீ?” என்றாள் அனாமிகா கோபத்துடன். சில நிமிடங்களுக்கு முன் அவள் மனதில் வந்திருந்த சஞ்சலங்கள் போய் மீண்டும் நந்தினி மீதான கோபம் மட்டுமே மேலோங்கி இருந்தது!
“யாரை சொல்ற, நந்தினியையா? அவங்க தானே நமக்கு ஹெல்ப் செய்தாங்க?”
“அவளைப் பத்தி என் கிட்ட பேசாதே ஷ்யாம்!”
“அனு?”
“நந்தினி உனக்கு வேணா ஹெல்ப் செய்திருக்கலாம், எனக்கு எந்த ஹெல்ப்பும் செய்யலை. என்னை எனிமி போல நினைச்சு பழி வாங்க தான் பார்த்தாள். அவளைப் பத்தி பேச எனக்கு பிடிக்கலை...”
“அனும்மா...”
“ஷ்யாம், நான் இப்படித் தான்... என்னை என்னையாகவே பிடிச்சிருக்குன்னு தானே சொன்ன? அப்போ இதை எல்லாமும் கூட நீ அக்ஸப்ட் செய்து தான் ஆகனும். எனக்கு நந்தினியைப் பிடிக்கலை. அவளோட நான் பேசுறதில்லை, பேசுறதாகவும் இல்லை...”
ஷ்யாம் அனாமிகாவை ஒரு சில வினாடிகள் பார்த்திருந்தான்!
பின் மனதினுள் நந்தினியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டு,
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.