எஸ்.கே மீண்டும் படிகளின் பக்கம் பார்வையை ஓட்டினான். நந்தினி அவனை கவனிக்காமல் யாருடனோ பேசியபடி பொறுமையாக படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள்.
பார்வையைத் திருப்பிக் கொண்ட எஸ்.கே, தலையைச் சிலுப்பிக் கொண்டு வேகமாக நடந்துச் சென்றான்!
பைக் அருகே சென்றதும் ஆழ்ந்த மூச்சை வெளியேற்றினான்!
எந்தப் பெண்ணிடமும் பேச அவன் தடுமாறியதே இல்லை. ஆனால் இவளிடம் மட்டும் ஏன் இப்படி ஈர்ப்பு...? எதனால் இந்த தயக்கம்???
நந்தினி மட்டும் ஸ்பெஷல்... ஏன்???
இல்லை இது வெறும் பிஸிகல் அட்ராக்ஷன் மட்டுமே! வேறு ஒன்றுமில்லை...
தனக்குள் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டு பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றான் எஸ்.கே.
ஆனால், அன்றைய நாள் முழுவதும் நந்தினியே அவனை அலைக்கழித்தாள்.
ராபர்ட்டின் பேன்ட் செய்து கொண்டிருந்த ஒத்திகை, அந்த இசையின் ஓசை எதுவுமே எஸ்.கே’வின் கவனத்தைக் கவரவில்லை.
மாலையில் பைக்கை கிளப்பியவனுக்கு குழப்பமாக இருந்தது. வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் காந்தமாக இழுக்க, அதுவே அவனைத் தயங்கவும் வைத்தது.
நந்தினியை பார்க்கக் அவனுக்கு ஆசையாக இருந்தது... ஆனால் அப்படி அந்த ஆசைக்கு அடிப் பணியவும் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.