தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 20 - பிந்து வினோத்
கேள்வியுடன் பெரியவரைப் பார்த்தான் அரவிந்த்.
அவரும், அவனிடம் தான் பேசுவதை உறுதிப் படுத்துபவராக,
“இங்கே இருந்து பஸ்ஸு கிடையாதுங்க. நடந்துப் போகனும்...1.5 மைல் மேல இருக்கும். என் வீட்டம்மா வந்த உடனே போகலாம். எங்க கூடவே வாங்க நானே கூட்டிட்டுப் போறேன்!” என்றார்.
எங்கே? என்ன? எனக் கேட்க வேண்டும் என்றுக் கூட அரவிந்திற்கு தோன்றவில்லை. யார் இவர்?? டாக்டர் ஊரு என்றாரே... எந்த டாக்டரைச் சொல்கிறார்???
அரவிந்தின் மனம் வலிகளின் விளிம்பை தொட்டிருந்ததாலோ என்னவோ கன்னா பின்னாவென்று கனவு காணத் தொடங்கியது
...
This story is now available on Chillzee KiMo.
...
டன் நடந்து வந்தார் ஒரு பெண்மணி. அரவிந்திடம் பேசிக் கொண்டிருந்த பெரியவர், எழுந்து சென்று அந்த பூக்கூடையை வாங்கிக் கொண்டு அந்த பெண்மணியிடம் அவனை சுட்டிக் காட்டி எதையோ சொன்னபடி வந்தார்.