“கல்பனா, நிறுத்தப் போறீயா இல்லையா??”
சுசித்ரா குரலை உயர்த்தி சொன்னப் பிறகே டெஸ்கில் இருந்து முகத்தை நிமிர்த்தினாள் கல்பனா.
“இதுக்கு மேல என்னால பேச முடியலை கல்பூ! ஒரு மணி நேரமா போதும் டிசைனை அனுப்பலாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ இதை மட்டும் மாத்துறேன், அதை மட்டும் மாத்துறேன்னு சொல்லிட்டு இருக்க? எல்லாம் நல்லா தான் இருக்கு!!!”
சுசித்ரா இப்போதும் குரலை உயர்த்தியே பேச, கல்பனா பதற்றத்துடன் நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
“அனுப்ப பயமா இருக்கு சுச்சி. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் ஜட்ஜா இருக்கப் போறாங்க! ரொம்ப மோசமா கமண்ட்ஸ் கொடுத்தா நல்லாவே இருக்காது!”
“கல்ப்பூ அக்கா, காம்படிஷன்ன்னு சொன்னாலே அதுல கலந்துக்குறது தான் முக்கியம். ஜெயிக்குறது தோக்குறது எல்லாம் முக்கியம் கிடையாது!” என்று இவர்களின் பேச்சில் குறுக்கிட்டு பதில் சொன்னாள் துர்கா.
“கரக்ட் துர்கா!” என்று சுச்சி பாராட்ட, சுமங்கலி,
“என்ன கரக்ட், ரொம்ப தப்பு சுச்சி மேம்! உங்க இரண்டுப் பேர் பேச்சு எங்களுக்கு எவ்வளவு எண்டர்டெயின்மென்ட்டா இருந்துது தெரியுமா? பாப்கார்ன் மட்டும் கிடைச்சிருந்தா பர்ஃபக்ட்டா இருந்திருக்கும்!” என்றாள்.
அவள் கிண்டலடிப்பது புரிந்தும் சுசித்ரா, கல்பனா இருவரும் சிரித்தார்கள்.
“ஆறு பேருமா சேர்ந்து என்ட்ரி அனுப்புறோம்னு பேரு! நீங்க நாலு பேரும் ஏதாவது செய்தீங்களா?” என்று கேட்டுக் கொண்டே கல்பனா சேவ் செய்திருந்த டிசைனை போட்டிக்கு அனுப்ப அப்லோட் செய்யத் தொடங்கினாள் சுசித்ரா.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.