(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பாரதிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

  

உனக்கு தெரியாது பாரு... உன்கிட்ட எதுவும் சொல்லலை என்றாலும், அத்தைக்கும், இவருக்கும், நீ இப்படி இருப்பதில் கவலை தான்... ஆனால் என்ன தான் ஒரு ஃபேமிலி போல பழகினாலும் உன்னுடைய பர்சனல் விஷயத்தில் தலையிட அவங்களுக்கு கொஞ்சம் தயக்கம்...”

  

ம்ம்ம்...”

  

பாலா விஷயம் வேற தெரியும் என்பதால்...”

  

என்ன? அதை யாரு அம்மாகிட்டயும் அண்ணா கிட்டேயும் சொன்னது?”

  

அத்தைக்கு தெரியாது... இவர் கிட்ட நான் தான் கொஞ்சம் மேலோட்டமா சொன்னேன்...”

  

ஓ!!!”

  

கோபமா?”

  

இல்லை பவி... உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம், இது அண்ணாக்கு மட்டும் தெரிஞ்சால் என்ன ஆகி விடப் போகுது??”

  

பாரதியின் குரலில் இருந்த கசப்புணர்ச்சியை கவனித்த பவித்ரா,

  

இங்க பார், சும்மா என்னவோ இப்படி சோக கீதம் பாடாதே... நீ பழைய பாருவா வரணும்... அது தான் அந்த பாலாவுக்கு நீ கொடுக்கும் நெத்தி அடி... இப்படி குழம்புறதை எல்லாம் விட்டுட்டு நல்லப் பொண்ணா இரு... நானும் இவரும் உனக்கு ஏத்த மாதிரி ஒருத்தனை கண்டுப் பிடிக்கிறோம்...” என்றாள் திடமாக!

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.