அவன் இப்போது அவனுடன் இருந்த மற்ற இளைஞர்களை விட கொஞ்சம் முன்னே வந்து நின்றிருந்தான்...
சௌந்தர்யா அவனைப் பார்த்து முறைத்தாள்...
“டேய் பொண்ணு முறைக்குதுடா!”
“செல்லம் முறைக்காதம்மா!”
என புதுக் குரல்கள் இப்போதுக் கேட்டது!
இவர்களெல்லாம் அவனின் நண்பர்களா???
மற்றவர்களின் சீண்டல்களை விட, அவள் பக்கம் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த 'அவன்' அமைதியாக இருந்தது தான் சௌந்தர்யாவை அதிகமாக கோபப் படுத்தியது...
‘இவன் நல்லவனே இல்லை!’
மனதினுள் அவனைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டவள்... அவனையும் அவனின் நண்பர்களையும் மனதில் அர்ச்சனை செய்தபடி நடந்தாள்...
அதற்குப் பிறகு, அந்த ஊர் மட்டுமல்லாமல், தோழியின் திருமணம் கூட சௌந்தர்யாவிற்கு ரசிக்கவில்லை...!
**********************
தோழியின் திருமணம் முடிந்து சென்னை திரும்பிய பிறகும், பல நாட்கள் 'அவன்' மீதிருந்த கோபம் சௌந்தர்யாவின் மனதினுள் கனன்றுக் கொண்டே தான் இருந்தது!