ஊட்டி மருத்துவமனையில்
மெல்ல கண்கள்திறந்துப் பார்த்தாள் ஜீவிதா எவ்வளவு நேரம் அங்கு இருந்தாளோ கண்கள் திறந்ததும் எரிச்சல் தொடங்க அவள் உதடுகள் வலியில் முணுமுணுத்தது.
”ம்ம்ம் அம்மா” என மெதுவாக வேதனையில் நொந்தபடியே கண்கள் திறந்துப் பார்த்தாள், எதிரே இரு உருவங்கள் நிற்பது தெரியவும் அவளுக்கொரு பேராசை வந்திருப்பது, அவர்கள் தாய் தந்தை என நினைத்து ஆசையாக
”அப்பா அம்மா” என ஈனக்குரலில் அழைக்க பதிலுக்கு
”சின்னம்மா எப்படியிருக்கீங்க” என அன்னம் கேட்க கூடவே பொன்னுசாமியும்
”சின்னம்மா நல்லாயிருக்கீங்களா டாக்டரை வரச்சொல்லவா” என கேட்க அந்த குரல்களை கேட்டதும் ஜீவிதா கண்களை உருட்டி நன்றாக விழித்துப் பார்த்து நொந்தேப் போனாள்.
”சே” என தலையில் தன் கையால் அடித்துக் கொள்ள அன்னமோ பயந்தாள்
”அம்மா என்னாச்சிம்மா ஏன்மா அடிச்சிக்கிறீங்க, என்னாச்சிம்மா தலை வலிக்குதாம்மா” என கவலையுடன் கேட்க ஜீவிதாவோ
”ஒண்ணுமில்லை நான் நல்லாதான் இருக்கேன்” என சொல்ல அன்னத்திற்கும் பொன்னுசாமிக்கும் நிம்மதியாகிப் போனது.
அவர்கள் உடனே போன் மூலம் சுபாஷினியையும் கணேசனையும் தொடர்பு கொண்டு ஜீவிதா கண்விழித்த தகவலை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்கள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த ஜீவிதாவும் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்
அன்னமோ அவளிடம்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.