விசாலினியும், ரச்னாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, பள்ளியில் இருந்து வீடு திரும்பி இருந்த வித்யாவும், சத்யாவும் அம்மா இல்லாத தைரியத்தில் பள்ளி சீருடையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை கண்டிக்க விசாலினி வாயை திறக்கும் முன்,
“என்ன விளையாடுறீங்க?” எனக் கேட்டு அவளை முந்திக் கொண்டாள் ரச்னா.
இரண்டு சிறுமிகளும் வெட்கத்துடன் ஓடிப் பிடிச்சு விளையாடுறோம், என சொல்ல,
“நானும் வரட்டுமா?” எனக் கேட்டாள் ரச்னா!
அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாலும், தடுக்காமல், மகள்களிடம்,
“இந்த அக்காவையும் உங்க விளையாட்டுல சேர்த்துக்கோங்க... எனக்கு அடுக்களையில வேலை இருக்கு..” என சொல்லி விட்டுச் சென்றாள் விசாலினி.
திண்ணையில் அமர்ந்திருந்த பொன்னம்மா நடப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் ரச்னாவிடம் எரிந்து விழும் விசாலினி தண்மையாக நடந்துக் கொள்வதை அவள் கவனிக்கத் தவறவில்லை!!! 'பரவாயில்லையே, நல்ல மாற்றம் தான்!!!' என தன் பேரனின் மனைவியை மனதுக்குள் வியந்துக் கொண்டாள் பொன்னம்மா.
*****
ஓசை எழுப்பிக் கொண்டிருந்த செல்போனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபா!
ஸ்ரேயான்ஷ் தான் அவளை போனில் தொடர்புக் கொள்ள மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தான்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.