தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
10. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
சஞ்சீவ் பக்கம் திரும்பிய இந்து,
"சாரி சஞ்சீவ்! நான் அப்படி கையை பட்டுன்னு இழுத்திருக்க கூடாது தான்... சாரி.. " என்றாள்.
தன் யோசனையை இந்து தவறாக புரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த சஞ்சீவ்,
"என்ன இந்து நீங்க, இதுக்கு எல்லாம் போய் சாரி சொல்லிட்டு இருக்கீங்க? நான் அதைப் பத்தி யோசிக்கலை.... நான் அதை தப்பா நினைக்கவும் இல்லை.. உண்மையா சொன்னால் நான் தான் உங்க கிட்ட சாரி கேட்கனும்... என்னை உங்களுக்கு ஒரு நாள் கூட முழுசா தெரியாது எனும் போது நான் அப்படி நடந்திருக்க கூடாது.. ஆனால், என்னோட சந்தேகம் தெளிவான சந்தோஷத்தில் உணர்ச்சி வசப் பட்டுட்டேன்...."
"தட்ஸ் ஓகே... சரி, போகலாம் வாங்க.. ரொம்ப லேட் ஆயிடுச்சு..." என்று சொல்லி எழுந்துக் கொண்டாள் இந்து.
இருவரும் ஒன்றாக கார் அருகே வரவும், ஜெயா கார் என்ஜினை ஸ்டார்ட் செய்தார்.
"இந்து, நீங்க கிளம்புங்க... நானே இங்கே இருந்து போயிடுவேன். எனக்காக இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணினதற்கு ரொம்ப தேங்க்ஸ்... யூ.எஸ்'ல படிச்ச ஒரு வருஷத்தை விட இந்த ரெண்டு மணி நேரத்தில நான் நிறைய கத்துக் கிட்டேன்..." என்றான் சஞ்சீவ்.
"வேஸ்ட் எல்லாம் இல்லை, சஞ்சீவ்... நிஜமாகவே ரொம்ப நாளுக்கு அப்புறம் நானும் கீதா அக்காவோ, வீணாவோ இல்லாமல் வெளியே வந்திருக்கேன்... நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்... சரி, உங்க பிசினஸ் எப்படி போகுதுன்னு அப்போ அப்போ எனக்கு அப்டேட்ஸ் கொடுக்கணும், சரியா?" என்றாள் இந்து மிரட்டும் தோரணையில்.
"ஐயோ டீச்சர் அம்மா, ரொம்ப பயமா இருக்கே..." என்ற சஞ்சீவின் நடிப்பை பார்த்து அவள் சிரித்தாள்.
அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த சஞ்சீவ்,