என்று சொல்ல கேட்பதற்கு......"
அவன் வித்தியாசமாக இழுத்து, இழுத்துப் பேசவும், பெண்கள் இருவரும் சிரித்தனர்.
"விளையாட்டு எல்லாம் இருக்கட்டும்டா... இவ்வளவு நேரம் எங்கே போய் சுத்திட்டு வர? கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்ல... உன் அண்ணன் தான் லேட்டா வர்றான்... நீயாவது ஒரு அஞ்சு மணி மாதிரி வீட்டுக்கு வரக் கூடாதா?"
"மன்னியுங்கள் தாயே.... இனி மேல் நான் தினமும் தாமதமாக தான் வருவேன்...."
"ஏன் அத்தை, சென்னையிலே வெயில் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு போல இருக்கே?" என்றாள் கீதா கிண்டலாக.
"வெயில் ஜாஸ்தி ஆகலை அண்ணி... எனக்கு தான் பொறுப்புணர்ச்சி ஜாஸ்தி ஆயிடுச்சு..." என்றான் சஞ்சீவ் தன் விளையாட்டு பேச்சை விட்டு விட்டு.
"இதுக்கு வெயில் ஜாஸ்தி ஆனாலே பரவாயில்லை போல இருக்கே..." என்று காஞ்சனா சொல்லும் போதே, குறுக்கிட்டு,
"அம்மா, விளையாட்டு எல்லாம் அப்புறம்... எனக்கு நீங்க ரெண்டுப் பேரும் ஒரு பெரிய உதவி செய்யனும்... இது நம்ம ஹாஸ்பிட்டல் விஷயம் தான்.... உங்களுக்கே தெரியும் அந்த ஹாஸ்பிட்டல்ல அஞ்சு மாடி இருக்கு... ஆனால் அவுட் பேஷண்ட்ஸ் பார்க்கிறது கிழேயும் முதல் மாடிலேயும் தான். நம்ம ஹாஸ்பிட்டல்ல நிறைய ஸ்பேஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... அதனால பேஷண்ட்ஸ் எண்ணிக்கையும் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அப்போ அங்கே சில சமயம் வர நோயாளிங்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்க மாட்டேங்குது.... ஸோ, கொஞ்சம் ஹாஸ்பிட்டல் லேயவுட் பார்த்து ஏதாவது மாறுதல் செஞ்சா இதை அவாயிட் பண்ண முடியுமான்னு பார்க்கனும்..... எனக்கு கொஞ்சம் ஐடியாஸ் இருக்கு... டீமும் சில ஐடியாஸ் ஷேர் செய்திருக்காங்க... நீங்களும் பார்த்து உங்களுக்கு தோன்றுகிற ஐடியாஸ் சொன்னால்... எது நல்ல ஐடியாவோ அதை செய்யலாம்....." என்றான் சஞ்சீவ் விளக்கமாக!