(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

14. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கீதா உடனடியாக பதில் சொல்லாது மெளனமாக இருந்தாள்.... பின் கணவனை நேராக நோக்கினாள்...

  

"நம்ம லவ் பத்தி தெரிஞ்சப் போது அப்படி தானே, ராஜ்? அப்போதே அப்படின்னா  இப்போ மட்டும் நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....?"

  

"ம்ம்ம்.. அப்போ  இந்துவிடம் எனக்காக நீ பேசினது எல்லாம் பொய்.. உனக்கே என் மேல் நம்பிக்கை இல்லை அப்படி தானே?"

  

ராஜீவின் மாறுப்பட்ட குரலில் சிறிது தயங்கிய போதும்,

  

"நம்பிக்கை இல்லைன்னு இல்லை, ராஜ்....., ஆனால் நீங்க உங்க அம்மாவின் பேச்சை மீற மாட்டீங்க தானே? அதை நான் தப்பாவும் சொல்லலை.. ஆனால் எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் விட்டு கொடுக்கனும்ன்னு தானே எதிர்பார்ப்பீங்க? இப்போ இந்து விஷயத்தில்... ம்ம்ம்ம்... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, ராஜ்... சஞ்சீவ் அவ்வளவு ஈசியா விட்டு விட மாட்டார் தான்..... இருந்தாலும் இது அத்தையை, நம் வாழ்க்கையை பாதிக்குமோ..." என்றாள் கீதா யோசனையுடன்.

  

"நீ இவ்வளவு யோசிச்சு கவலையே பட வேண்டாம், லூசு...." என்றான் ராஜீவ் கீதா பேசுவதை போலவே!

  

மனதில் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்த கீதா, அவனின் விளையாட்டு பேச்சில் திகைத்து அவனை நோக்கினாள்.

  

"ஆமாம்டா செல்லம்... இந்து உனக்கு மட்டும் ஃபிரென்ட் இல்லை.. எனக்கும் தான்... சஞ்சீவ் மட்டும் இல்லை இந்து வாழ்க்கையிலும் அக்கறை காட்ட வேண்டிய கடமை எனக்கும் இருக்கு.... அது மட்டும் இல்லை, அவங்க கல்யாணம் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும்ன்னா அதை விட எனக்கு வேற என்ன முக்கியமான காரணம் வேண்டும்? நீ இந்த கவலை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சந்தோஷமா இரு... ஏதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்துக்கிறேன் சரியா? அப்புறம், நம்ம கல்யாணம் பத்தி சொன்னீயே, யோசித்து பார்... நான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.