(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"கீதா... டார்லிங்... நான் பேசாமல் இன்னைக்கு லீவ் போட்டுறவா.... நாம ரெண்டு பேரும் ஃபுல் டே வெளியே எங்கேயாவது போய் ஸ்பென்ட் பண்ணலாம்...?" என்றான் ராஜீவ்.

  

மறுப்பாக தலை அசைத்தாள் கீதா...

  

"வேண்டவே வேண்டாம் ராஜ்... நீங்க கிளம்புங்க... அத்தை வேற..."

  

அவள் பேச்சை பாதியில் நிறுத்தி,

  

"சரி சாயந்திரம் பிக்சர் போகலாமா?" என்றான் ராஜீவ்.

  

அவனின் கேள்வியில் இருந்த ஆவல் உணர்ந்து  தயக்கத்துடன் பார்த்தாள் கீதா...

  

"இல்லை ராஜ், அத்தை கோயிலுக்கு போகனும்ன்னு சொல்லி இருக்காங்க..."

  

"சரி..." என்று ஏமாற்றத்தோடு சொன்னவன், கீதாவின் முகம் களை இழப்பதை கவனித்து விட்டு,

  

"சரி... நீ கோயிலுக்கு போ... ஆனால் அதுக்கு compensate பண்ண எனக்கு இப்போ ஏதாவது ஒன்னு கொடு...." என்றான்!

  

அவன் எதிர்பார்த்தப் படியே, கண்கள் மின்ன,

  

"ஒன்னு என்ன பத்து பதினைந்தே தரேன்!" என்று அடிப்பது போல் கை ஓங்கினாள் கீதா.

  

"நீ இவ்வளவு பெரிய ரவுடி ன்னு எனக்கு தெரியாமல் போச்சே..." என்று பயப் படுவதாய் பாசாங்கு செய்து சிரித்தவனோடு, அவன் மனைவியின் நகைப்பொலியும் இணைந்துக் கொண்டது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.