This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுவாதி தனக்குள் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, பத்மாவதி இரண்டு புதியவர்களுடன் அறையினுள் வந்தாள்.
“சுவாதி, இவர் என் கணவர். இவன் என் மூத்த மகன் அஜய்...”
அஜயும், சிதம்பரமும் தங்களின் பங்கிற்கு சுவாதிக்கு நன்றியைக் கூறினார்கள்.
இப்போதும் அதை அடக்கத்துடனே ஏற்க மறுத்தாள் சுவாதி...
“உங்க வீட்டுப் போன் நம்பர்... இல்லன்னா யாருடைய மொபைல் நம்பராவது கொடுங்க... நான் அவங்களுக்கு போன் செய்து சொல்லிடுறேன்... பாவம் உங்களுக்காக தேடிட்டு இருப்பாங்க...” என்றான் அஜய்.
சுவாதிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை...
விஷாகனின் நம்பரை கொடுத்தால், அவளின் குழப்பங்கள் முடிவுக்கு வந்து விடும்...
ஆனால் அதற்கு அவளின் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை...
சரியோ, தவறோ ஒரு முடிவை எடுத்து அங்கிருந்து வந்தாகி விட்டது... இனி அதன் போக்கில் செல்ல வேண்டியது தான்...!
போன் நம்பர் கொடுக்காமல் சுவாதி யோசனையில் ஆழ்ந்திருக்க, அஜய் கேள்வியாக தன் பெற்றோர்களைப் பார்த்தான்...
அவனுக்கு 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கண்களால் செய்தி சொன்ன பத்மாவதி,
“அவ டையர்டா இருக்கா அஜய்... நான் அப்புறம் போன் நம்பர் வாங்கி தரேன்... நீயும் அப்பாவும் அஸ்வினோட இருங்க... தேவைபட்டா என்னை கூப்பிடுங்க...” என்றாள்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.