This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இரவெல்லாம் ஒரு வினாடி கூட தூங்காமல் முன்பு நடந்ததை நினைத்தப் படி படுத்திருந்த சுவாதிக்கு, மூன்று ஆண்டுகள் கழித்து அவளைப் பார்த்த விஷாகன் அவளிடம் நடந்துக் கொள்ளும் விதத்தில் ஏமாற்றம் பொங்கியது...
சுவாதி அவர்கள் இருவரின் அன்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை தவறா???
விஷ்ணுப்ரியா சொன்னதை வைத்துப் பார்த்தால், முன்பு நடந்த எதுவும் அவனுக்கு தெரியாது என்பது அவளுக்குப் புரிந்தது...
ஆனாலும் விஷாகனுக்கு அவள் மீது உண்மையான அன்பு இருந்தால், அவள் வீட்டில் இருந்து கிளம்பி சென்றதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டுமே...
அவனுக்கும் கேள்விகள் இருந்திருக்கும்... அவளை நேரில் பார்த்தப் போது, என்ன ஆனது என்று ஒரே ஒரு கேள்வியாவது நேரடியாக கேட்டிருந்திருக்கலாமே...
எதுவுமே கேட்காமல் அவளை அவமானப் படுத்த வேண்டும் என்றல்லவா நடந்துக் கொள்கிறான்...
விஷாகனுக்கு அவள் மீதிருந்த அன்பு காணாமல் போய் விட்டதா???
நெஞ்சை அடைத்த கேள்வியில் இருந்து சுவாதியை தப்பிக்க வைக்க விரும்புவதைப் போல அலாரம் சத்தமாக ஒலித்தது...
காலை ஐந்து மணியாகி விட்டதா என்ற கேள்வியை விட, ஏதாவது வேலையிலாவது தன்னை ஆழ்த்திக் கொள்ளலாம் என்ற யோசனையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் சுவாதி...
*****
சுவாதியைப் போலவே இரவெல்லாம் தூங்காமல் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த விஷாகன், இன்னமும் அதில் இருந்து வெளி வராமலே தான் இருந்தான்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.