This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஷ்யாம் சுந்தர் சென்றப் பின்பும் அதே இடத்தில் நின்றிருந்தாள் தமிழ்ச்செல்வி.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்கும் நிலையில் தான் இருப்பது அவளுக்குப் புரிந்தது.
சித்தியின் பேச்சைக் கேட்டு, பிடிக்காதவனை திருமணம் செய்துக் கொள்வதா, இல்லை, ஷ்யாம் சுந்தருடன் சென்று அம்மாவை போலவே ஓடிப் போனவள் என்ற பட்டத்தை பெற்றுக் கொள்வதா?
எது சரி எது தவறு?
தமிழ்ச்செல்வியால் சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை!
*****
தொல்லை ஒழியப் போகிறது என்ற நினைப்பினால் போலும், சித்தி இப்போது எல்லாம் தமிழ்ச்செல்வியிடம் கத்துவது, திட்டுவதை எல்லாம் குறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் மகள்களும் அக்காவை விட்டு ஒதுங்கியே இருந்தார்கள்.
தமிழ்ச்செல்வி அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு திடமான பதில் இல்லாமல் இருந்தாள்.
அந்த மாமன் மகனின் அசிங்கமான பார்வையும், திமிரான நிமிர்த்தலும் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.
அதற்காக காதல், காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஷ்யாம் சுந்தரை ஏற்றுக் கொள்வதும் அவளுக்கு சரியாக படவில்லை.
ஷ்யாம் சொன்னது போல அவனை நண்பனாக நினைத்து அவனின் உதவியை ஏற்றுக் கொள்ளலாமா?
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.