This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அருந்ததி நிமிர்ந்து அமர்ந்தாள்!
ஏழு வருடங்களுக்கு முன் அவள் அனுபவித்த மனப் போராட்டம் தானே அது... அவர்களின் ஊரில் பரவிய தொற்று வியாதியினால் பாதிக்க பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். மற்றவர்கள் அவர்களின் பக்கத்தில் சென்று பார்க்க கூட அனுமதிக்க படவில்லை.
அவளின் அம்மா, அப்பா இருவருமே மருத்துவமனையில் இருக்க, என்ன, ஏது, எப்போது எந்த செய்தி வரும் என்று புரியாமல் அவள் கலங்கிய நின்ற நிலை...!
அனுபவித்தவருக்கு மட்டுமே அது புரியும்.
ஷிவாவின் பக்கம் மீண்டும் பார்த்தவள், அன்புடன் அவனின் கேசத்தை வருடி விட்டாள்.
சில மணி நேரத்திற்கு முன் அவளின் மனதில் இருந்த ஏமாற்றம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயிருந்தது...
அன்று அம்மா, அப்பாவிற்காக அவள் தவித்தப் போது, அவளின் அருகே மற்றும் மற்ற உறவினர்கள், நண்பர்கள் என எவ்வளவோ பேர் இருந்தார்கள். ஆனாலும், யாருமே இல்லாமல் தனியே தவிப்பதாக தான் அவளுக்கு தோன்றியது...
அதுவே மனம் ஒன்று பட்ட கணவன் மனைவி எனும் உறவில் எனும் போது, அது போல் தனிமை இல்லை... இருவரும் ஒருவரே...
அருந்ததியுடைய மனக் கலக்கத்தை ஷிவாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது... தன்னுடைய ஆசைகளை ஒதுக்கி அவளுக்காக விட்டுக் கொடுக்க அவனால் முடிந்தது...
அவனுக்கு ஒரு குழப்பம் என்றால் அவளுக்கு வலித்தது... குழப்பங்களை சீர் செய்து அவனுக்கு அமைதியை தர வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.