This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இனியவன் சுந்தரியின் பக்கத்தில் வந்து நின்றான்.
“நீ வந்தப் பிறகு என்ன எல்லாமோ நடக்குது சுந்தரி!” இனியவன் ரகசியமாக அவளின் காதில் சொன்னான்.
“எதை சொல்றீங்க?” புரியாமல் கேட்டாள் சுந்தரி.
அப்பா, அம்மாவை கண்ணால் சுட்டிக் காட்டினான் இனியவன்.
“இரண்டுப் பேரும் ஏதோ ஆஃபீஸ்ல வேலை செய்றவங்க மாதிரி எப்போவும் பேசிப்பாங்க. இப்போ பாரு அப்பா உனக்கு எடுத்த புடவை நல்லா இருக்குன்னு சொல்றாரு, அம்மா அவரை லுக்கு விடுறாங்க, அவரு நீயும் புடவை எடுத்துக்கோன்னு கொஞ்சுறாரு. உலக அதிசயமா இருக்கு!”
ஜெயஸ்ரீ சேலைகள் தேடுவதையும், அருணாச்சலம் பக்கத்தில் இருந்து உதவுவதையும் பார்த்து விட்டு, பற்கள் தெரிய சிரித்தாள் சுந்தரி.
“நீ வந்தப்புறம் தான் எங்கப்பா கண்ணுல எங்கம்மா தெரியுறாங்க போலருக்கு.” இனியவன் இப்போதும் அதே ரகசிய குரலில் அவளிடம் பேசினான்.
“அவங்க எப்போவும் போல இருக்காங்க. நீங்க இப்போ தான் முதல் முறையா சுத்தி சுத்தி பார்க்காம அவங்களைப் பார்க்குறீங்கன்னு நினைக்கிறேன்.” சுந்தரி சிரிப்பு மாறாமலே சொன்னாள்.
“உனக்கு வாய் அதிகமாகிட்டே போகுது.” பக்கத்திலிருந்த சுந்தரியின் இடுப்பில் ரகசியமாக விரலால் சீண்டினான் இனியவன்.
அவனைப் போல ரகசியமாக அதை ஏற்றுக் கொள்ளாமல், எதிர்பாராத அந்த தீண்டலில் துள்ளிக் குதித்தாள் சுந்தரி.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.