This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“என்னங்க, இவங்க வீடு பார்க்க வந்திருக்காங்க,” என்று கணவனிடம் உரக்க சொன்ன சத்யா, குரலை தணித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்பதுப் போல,
“யாருன்னு தெரியுதாங்க? சக்திங்க!” என்றாள்.
தென்றல்வாணன் இது எதையும் ரசிக்கவில்லை.
சக்திக்கு அது தென்றல்வாணன் வீடு என்பது அப்போது தான் தெரிய வந்தது.
“சக்தி! உங்களுக்கு தெரியாதது இல்ல........” கட் & ரைட் ஆக பேசும் தென்றல்வாணன் இழுத்து இழுத்துப் பேசவும் சத்யா என்ன என்பதாக அவனைப் பார்த்தாள்.
ஆனால் சக்தி புரிந்துக் கொண்டாள்.
“புரியுது தென்றல்வாணன். என்னால உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம். நான் வேற வீடு பார்த்துக்குறேன்,” என்றாள்.
சத்யா பக்கம் கூட பார்க்காமல் சக்தி வாசல் பக்கமாக நடக்க தொடங்கி விட, சத்யா தென்றல்வாணனிடம்,
“என்னங்க நடக்குது?” என்றாள்.
“சத்யா, உன் கிட்ட என் டிபார்ட்மென்ட் பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன்.”
“உங்க டிபார்ட்மென்ட் எப்படி இருந்தா எனக்கு என்ன வந்துச்சு? இது என் வீடு, நான் யாருக்கு வேணா வாடகைக்கு விடுவேன்.”
“வாயை மூடிட்டு உள்ளே போ.”
“ஓஹோ! இன்ஸ்பெக்டர் சார் சொல்லிட்டாரு! நான் உடனே கேட்கனுமா???”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.