இரண்டு மாடிகள் கொண்ட வீடு. பெயின்ட் அடித்து வருடங்கள் ஆனதால் டல்லாக இருந்தது.
ஒரு காலத்தில் நன்றாக பராமரிக்கப் பட்டிருந்த மரங்களும், புல்வெளியும் இப்போது சரியாக கவனிக்காமல் அடர்த்தியாக வளர்ந்து இருந்தது.
சத்யா நன்றாக சத்தம் வருமாறு மீண்டும் பலமாக தாழ்ப்பாளை தட்டினாள்.
“யாரும்மா?” என்ற வயதான குரல் ஒலித்தது.
“சத்யா பாட்டி!”
“சத்யாவா!”
பொறுமையாக நடந்து வந்து கேட்டை திறந்த வயதான பெண்மணிக்கு வயது எழுபதை ஒட்டி இருக்கும்.
“பாட்டி, இவங்க சக்தி. என் ஃபிரென்ட். சென்னைல இருந்து வந்திருக்காங்க. அவங்களுக்கு எங்க வீடு மாதிரி இடுக்கமா, நாலு பக்கமும் சுவர் இருக்க மாதிரி வீடு வேண்டாம், தோட்டம், நடக்க இடம்னு இருக்க வீடு மாதிரி வேணும்னு சொன்னாங்க. சரி, உங்களுக்கும் உதவியா இருக்குமேன்னு இங்கே கூட்டிட்டு வந்தேன்.”
சத்யா சரளமாக ஃபிரென்ட், உதவி என்றெல்லாம் சொல்ல சக்தி அவளை சந்தேகமாக பார்த்தாள்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்