This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
யசோதா தமிழ்ச்செல்வியின் ஆர்வத்தை தவறாக எடுத்துக் கொள்ளாது பதில் சொன்னாள்.
“வெற்றி தான் அவளை காதலிச்சிருக்கான். அந்தப் பொண்ணுக்கு அவன் மேல காதல் இல்லை. எதையும் சரியா வெற்றி கிட்ட சொல்லாம கொள்ளாம வெளிநாடு போயிடுச்சு அந்த பொண்ணு. வெற்றியால அவளை மறக்க முடியாதாம். அவ திரும்பி வர வரைக்கும் அவளுக்காக காத்திருக்க போறானாம். திரும்ப காதலை சொல்லப் போறானாம். இங்கே அத்தை ரெண்டுப் பேரும் ரொம்ப நிர்பந்திக்குறாங்க. அவங்க கிட்ட வெற்றி காதலிக்குற விஷயத்தை சொன்னால் நம்ப மாட்டேங்குறாங்க. பொய் சொல்றான்னு சொல்றாங்க. அந்தப் பொண்ணை கண்ணால பார்த்தா மட்டுமே நம்புவேன்னு சொல்றாங்க. அதனால வேற வழி இல்லாம அவனுக்கு காதலியா நடிக்க ஒரு பொண்ணு யாரையாவது கண்டுபிடிச்சுக் கொடுக்க என் கிட்ட கெஞ்சிக் கேட்டுகிட்டான். அவனுக்காகன்னு நான் கேட்டதுல, என் தோழி ஒருத்தியும் ஒரு பொண்ணு பத்தி சொன்னா. அத நம்பி வெற்றியும் அத்தை கிட்ட அவன் காதலியை கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லிட்டான்.“
“அப்புறம் எதுக்கு நான் நடிக்கனும்?” தமிழ்செல்வி மனதில் தோன்றிய கேள்வியை யோசிக்காமல் கேட்டாள்.
“நடிக்க வரேன்னு சொன்ன பொண்ணு கடைசி நிமிஷத்துல வர மாட்டேன்னு சொல்லி காலை வாரிடுச்சு. அவளை பார்க்கன்னு சின்ன அத்தையும் ஊரில இருந்து வந்திருக்காங்க!” என்றாள் யசோதா பெருமூச்சுடன்.
“எனக்கு என்னவோ இப்போவாவது நீங்க உண்மையை சொல்லிடுறது நல்லதுன்னு தோணுதுக்கா.”
“இனிமேல் அதுவும் முடியாதே தமிழ்ச்செல்வி!”
“ஏன் அப்படி?”
“இன்னைக்கு விடிகாலையில சின்ன அத்தைக்கு ஊருக்கு போக ட்ரெயின் இருந்தது. வெற்றியும், வெற்றியோட நண்பர்களும் அவங்க கூட போறதா திட்டம் போட்டிருந்தாங்க.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.