தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 36 - பிந்து வினோத்
36. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒன்றும் புரியாது விழித்த பாரதி,
“அப்படி என்ன மாத்தினீங்க?” என்றாள் கேள்வியாக!
“கேள்வி பட்டேன் ரதி, நீ இத்தனை வருஷத்தில் ஒரு நாள் கூட லீவ் போட்டதில்லையாமே? அப்படிப்பட்ட சின்ஸியர் சிகாமணி, காலேஜ் ரீ ஓபன் ஆகுதுன்னு இவ்வளவு அலுத்துக்குறீயே... அப்போ என்ன அர்த்தம்?”
விவேக் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,
“ப்ச்... விவேக்” என்று சிணுங்கினாள் பாரதி.
“ரதி, உனக்கு இந்த வேலை மேலே எவ்வளவு பிரியம்னு எனக்கு தெரியும். அதனால தான் நான் ஒன்னும் சொல்லலை... உனக்கு பிடிச்ச எதையும் தடுக்க எனக்கு விருப்பம் கிடையாது... மத்தபடி உன்னை வேலைக்கு போக அனுப்பியே இருக்க மாட்டேன்... இப்போதும் கூட ஒன்னும் கெட்டு போகலை. காலேஜ் வேலையை விட்டுட்டு வா... என் ஆஃபீசில என் சீட் பக்கத்தில் உனக்கு ஒரு சீட் போட்டு தரேன்... அதும் நம்ம கம்பெனி ஆரம்பித்தப் பிறகு, இன்னும் ஃப்ரீடம் தான்...”
“ப்ச்... விவேக்...” என பாரதி மீண்டும் சிணுங்க, விவேக்கின் முகம் காதலுடன் மலர்ந்தது!
“ஹேய் சினுங்காதே... இந்த அரேன்ஜ்மேன்ட்டில் எத்தனை நல்ல விஷயம் இருக்கு தெரியுமா... நான் உன்னை பார்த்துட்டே இருக்கலாம், மூட் வந்தால்...”
கையினால் அவன் வாயை மூடி அவனின் பேச்சை நிறுத்திய பாரதி,
“உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க...” என்றாள் பொய் அலுப்புடன்!
“ஹேய், நீ என்கிட்டே என்ன சொன்ன? எதுவுமே சொல்லலை... சொன்னது எல்லாம் நான் தான்...”