“ரதி!!!”
“விவேக், நான் கிளம்பட்டுமா? டைம் ஆச்சு... ஈவ்னிங் மீட் செய்வோம், காலேஜ் போயிட்டு நான் கால்...”
முழுவதுமாக பேசி முடிக்கும் முன் பாரதி விவேக்கின் அருகில் இருந்தாள்.
“ராட்சஸி, அநியாயத்திற்கு ஏன் இப்படி அழகா இருக்க?” என்றவன், அவள் பேச வாய்ப்பே கொடுக்காது அவளின் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்!
🌼🌸❀✿🌷
காரை டிரைவ் செய்துக் கொண்டிருந்த விவேக், அருகில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான். 'உர்' என்று அமர்ந்திருந்தவளைப் பார்த்து ஆயிரத்தி ஓராவது முறையாக,
“சாரி ரதி...” என்றான்.
அவனைப் பார்த்து முறைத்த பாரதி, எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.
“நான் என்ன செய்ய... நீ தேவதை மாதிரி வந்து எழுப்பினால் நான் என்ன செய்றது... சாரிடா...” என்று மீண்டும் சொன்னான் விவேக்.
அதற்குள் கல்லூரி வந்து விடவும், பதில் எதுவும் சொல்லாது, விவேக் பக்கம் மீண்டும் ஒரு முறை பார்த்து முறைத்து விட்டு, காரினில் இருந்து இறங்கிய பாரதி, கார் கதவை அறைந்து சாத்தினாள்... தொடர்ந்து, விவேக் பக்கம் திரும்பிக் கூட பார்க்காது நடந்துச் சென்றாள்.
அவள் ஸ்டாஃப் ரூமை அடைந்தப் போது பவித்ராவும் அங்கே தான் இருந்தாள். பாரதி உள்ளே நுழைந்த உடன் அந்த அறையில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது... அங்கிருப்பவர்கள் அனைவரின் பார்வையும் தன் மீது இருப்பதை பாரதியால் உணர முடிந்தது... அதனால்