தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
31. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அர்ச்சனா சொன்னதுப் போல மறுதினம் அலுவலகம் வந்த நந்தினி, நேரே இந்துவின் அறைக்கு வந்து அவளை சந்தித்தாள். நிறுவனத்தை தனியே நிர்வாகம் செய்து பழகியதாலோ என்னவோ, இந்து எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படையாக காட்டாமல் நந்தினியை வரவேற்று அமர சொன்னாள்.
"உங்களுக்கு ஆஃபீஸ் ரூம் ரெடி பண்ண சொல்லி இருக்கேன்... கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினீங்கன்னா ரூம் ரெடி ஆயிடும்... ஏதாவது சாப்பிடுறீங்களா... காஃபி? டீ?"
இயந்திரத்தனமாக ஒலித்த அந்த குரலைக் கேட்டு புன்னகைத்தாள் நந்தினி. புன்னகைக்கும் போது அவள் முகம் மேலும் அழகாவதை ஏற்றுக் கொள்ள மனம் வராத போதும் அது தான் உண்மை என்பதை உணர்ந்தாள் இந்து.
"பரவாயில்லை இந்து மேடம்... எனக்கு எதுவும் வேண்டாம்.... தேங்க்ஸ்...." என்றாள் நந்தினி.
"நீங்க என்னை மேடம்ன்னு கூப்பிடனும்ன்னு இல்லை... நீங்க எனக்கு அக்கா முறை தானே..."
"அந்த மரியாதை எல்லாம் எனக்கு இருக்கா என்ன?" என நந்தினி ஒரு மாதிரியான குரலில் சொல்லவும்,
"மதிப்பு மரியாதை எல்லாம் தானா வரனும்... நாம கேட்டு வாங்க கூடாது..." என்றாள் இந்து அமர்த்தலாக!
"நிஜம் தான்... உனக்கு எப்போவும் கீதா தானே அக்கா.... என் கூட பேச உன் ஃப்ரென்ட்ஸ் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டீயா?" என்றாள் நந்தினி, அதுவரை பயன்படுத்தி கொண்டிருந்த மரியாதை பன்மையில் இருந்து மாறி.
அவளின் பேச்சில் வந்திருந்த மாற்றத்தை உணர்ந்தப் போதும், அதை கண்டுக் கொள்ளாமல்,
"என்னோட உண்மையான ஃப்ரென்ட்ஸ் எப்போதும் தேவை இல்லாத விஷயத்தில தலைப் போட மாட்டாங்க... அதே போல தேவை இல்லாம நீங்க கீதா அக்கா பத்தியோ வீணா