மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 31 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“உனக்கு சந்தோஷம்னா, அதை வாய்ல சொன்னாலே போதும்!”
சக்தி அதை சொன்ன விதத்தில் சத்யாவிற்கு சிரிப்பு வந்தது.
“ஹையோ, போலீஸ்காரம்மா வெட்கப் படுறதை பாரேன்! என்ன, நான் கை போட்டதுக்கே இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்குற??? உனக்கு அக்கா, தங்கச்சி யாருமில்லையா?”
“ப்ச்,” என அலுத்துக் கொண்டாள் சக்தி.
“சொல்லு சக்தி. நான் எதையாவது உன் கிட்ட இருந்து மறைச்சிருக்கேனா?”
“சொல்ற மாதிரி எதுவும் இல்லை சத்யா. என் அம்மா, அப்பா கல்யாணம் ஒரு ஆக்சிடன்ட், நடந்திருக்க கூடாத ஆக்சிடன்ட், எனக்கு தெரிஞ்சு எப்போ பாரு சண்டைப் போட்டுட்டே இருப்பாங்க. நான் ஹை ஸ்கூல் படிக்கும் போது அப்பா இறந்துட்டார். அதுக்கு முன்னாடியே அவங்க இரண்டுப் பேருமே என்னோட ரொம்ப க்ளோஸ் இல்லை. அப்பாக்கு அப்புறம் அம்மாக்கு நான் liabilityஆ தெரிஞ்சேன். ஒரு போர்டிங் ஸ்கூல்க்கு அனுப்பிட்டாங்க. லீவு நாள்ல கூட நான் வரதை அவங்க விரும்பினதில்லை. அப்பா வழி தாத்தா, பாட்டி இருந்த வரைக்கும் அவங்க வீட்டுக்கு தான் போவேன். காலேஜ் முடிச்சப்போ, அதே தாத்தா, பாட்டி எனக்காக வச்சிருந்த ட்ரஸ்ட் வழியா பணம் வந்துச்சு. தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கவே சம்பாதிக்கனும்னு இல்லாம சொசைட்டிக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு யோசித்தேன். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி க்ளியர் செய்தப்போ ஐபிஎஸ் செலக்ட் செய்தேன். முடிஞ்ச அளவுக்கு நல்லது செய்தேன்னும் நினைக்கிறேன். இப்போ அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சுட்டு இங்கே இருக்கேன்! அவ்வளவு தான் என் முழுக்கதை!”
சக்தியின் பேச்சில் எந்த எமொஷனும் இல்லாமல் இருந்தது. ஆனால், சத்யாவின் மனம் நெகிழ்ந்துப் போனது.
“இனிமேல் உனக்கு நான் இருக்கேன் சக்தி. நாம இரண்டுப் பேரும் குட் ஃப்ரென்ட்ஸ்! சீக்கிரமே நான் முன்னாடி சொன்னதுப் போல ஒரு நல்ல மிஸ்டர் சக்தியையும் உனக்கு கண்டுப்பிடிச்சுத் தரேன்.”