(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

புரிந்துக் கொண்டான்.

  

மொபைல்ல ரீச் செய்ய முடியலை சார், அது தான் இந்த நம்பரில் கால் செய்தேன். உங்க ரிப்போர்ட் ரெடி ஆகிடுச்சு. டாக்டர் உங்க கிட்ட சொல்ல சொன்னார்.”

  

ஒரு வாரம் மேல ஆகும்னு சொன்னாங்களேன்னு தான் நான் ஃபாலோ அப் செய்யலை... சரி ஓகே, இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்து வாங்கிக்கவா?”

  

வாங்க சார், டாக்டர் கிட்ட கன்சல்ட் செய்துட்டு வாங்கிக்கலாம்... டாக்டர் தாமஸ் ஏழு மணி வரைக்கும் இருப்பார். நீங்க அந்த நேரம் வந்தால் அவரை பார்த்துட்டு ரிப்போர்ட்டையும் வாங்கலாம்...”

  

ஓகே... நான் வரேன்...”

  

அதற்குள் பாரதி தயாராகி வரவும், தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு அவளுடன் அவசரமாக கிளம்பினான் விவேக்.

  

இருவரும் பொதுவாக பேசிக் கொண்டே பவித்ராவின் வீட்டை அடைந்தார்கள்.

  

அங்கே ரமேஷ் ஆஃபீசில் இருந்து வீடு வந்திருக்கவில்லை! கமலாவும், பவித்ராவும் அவர்கள் இருவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

   

பொதுப்படையாக சில நிமிடங்கள் பேசி விட்டு, பாரதி பவித்ராவுடன் உள்ளே சென்று வேலை தொடர்பாக பேச தொடங்கினாள். கமலா குழந்தை நித்திலாவை செல்லம் கொஞ்சியபடி விவேக்கிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

   

விவேக்கிற்கு திடீரென ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த அழைப்பு நினைவுக்கு வந்தது. பாரதி இருந்த அறை பக்கம் பார்த்தான். அவள் பவித்ராவுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள்... பாரதி அரை மணி நேர வேலை என்று சொன்ன நினைவில், அவள் பேசி முடிப்பதற்குள் ரிப்போர்ட் வாங்கி விடுவது என்று முடிவு செய்தான். கமலாவிடம், சின்ன வேலையாக சென்று வருவதாக சொல்லி விட்டு உடனடியாக கிளம்பினான்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.