தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 54 - பிந்து வினோத்
54. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கற்பகத்தின் பேச்சினால் மனதில் எழுந்திருந்த கேள்விகளை விட, விவேக் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்ததால், தன் மனதில் எழுந்த யோசனையை பின்பற்றி,
“அத்தை, அவருக்கு இப்போலாம் வேலை அதிகமா?? உங்க கம்பெனி வேலை எல்லாம் போன மாசமே முடிஞ்சிடும்னு சொன்னாரே, இன்னமும் முடியலையா?” என கற்பகத்திடம் வினவினாள் பாரதி.
கற்பகம் ஏளனத்துடன் உதட்டை சுளித்தாள்!
“அந்த வேலை எல்லாம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு... இப்போ அவன் ராத்திரி பகல்ன்னு அலையுறது எல்லாம் புது கம்பெனிக்காக தான்... அவன் என்ன செய்றான்னு கூட தெரியாமல்... ப்ச்... இப்படி ஒரு மனைவியா? அப்படி எதைப் பார்த்து மயங்கி அவன் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டான்னே எனக்கு இன்னும் புரியலை! என்னவோ உலகத்தில இருக்கிற எட்டாம் அதிசயம் போல தானே அப்படி ஒரு பில்ட் அப்...!!!!! இந்த காலத்து பசங்களுக்கு இந்த விஷயத்தில் எல்லாம் அறிவு கொஞ்சம் கம்மியா தான் வேலை செய்யும் போல இருக்கு...”
கற்பகத்தின் பதில் உமாவை ஆச்சர்யப்படுத்தியது... அவளுக்கு தெரிந்த அளவில், கற்பகம் இப்படி எல்லாம் பேசுபவள் அல்ல... பாரதியிடம் மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வியின் கூடவே, பாரதி கோபத்தில் எதுவும் சொல்லி விடக் கூடாதே என்ற அக்கறையும் எழ பாரதியைப் பார்த்தாள்...
பாரதி கற்பகத்தின் பதிலினால் கோபப்பட்டதாக தெரியவில்லை... விபரம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே அவளிடம் இருப்பதாக தோன்றியது...
உமா பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாரதி கற்பகத்திடம் தொடர்ந்துப் பேசினாள்...
“அப்படி இல்லை அத்தை... இப்போ எல்லாம் அவரை சரியா பார்த்து பேசவே சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது... அப்புறம் நான் எப்படி இதை எல்லாம் கேட்குறது?”
“இப்போ தானே அவன் இப்படி பிஸியா இருக்கான்? அவன் உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தானே அப்போவே அவனைப் பத்தி முழுசா கேட்டு நீ தெரிஞ்சு வச்சிருக்கனும் தானே?