ஆண்டுகளாக தன்னை தானே பாதுகாத்து கொண்ட பாதுகாப்பு உணர்வினால் எழுந்திருந்த அனிச்சை செயலால் செய்தாள்...
ஒரே ஒரு வினாடி விழிகள் விரிய அவளை ஒருப் பார்த்த விவேக்... அடுத்த வினாடி அவளின் கையை உதறி விட்டு அங்கிருந்து விடுவிடு என்று நடந்து வெளியே சென்றான்.
கன்னத்தில் வாங்கி இருந்த அறையினால்... பாரதிக்கு வலிக்க தான் செய்தது... அதை விட அப்படி அடித்தவன் அவளின் ஆனந்த் என்ற உண்மை தான் அவளை இன்னும் அதிகமாக தாக்கப்படுத்தியது... அதன் காரணமாக அவளின் கண்கள் மெல்லியதாக கலங்கவும் செய்தது... ஆனால், இருக்கும் இடமும், அவளை சுற்றி இருப்பவர்களும் நினைவுக்கு வரவும் பாரதி தன்னை தானே சுதாரித்துக் கொண்டாள்... யாருக்கும் அவளின் வலியோ, கண்ணீரோ தெரிந்து விடக் கூடாது என்று தன்னை தானே சமாளித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.
பாரதி போனப் பிறகு தான் கற்பகத்தினால் அசையவே முடிந்தது... விவேக் அவளின் முன் பாரதியை அறைந்தான் என்பதை அவளாலேயே இன்னமும் நம்ப முடியவில்லை... விவேக் அப்படி நடந்துக் கொண்டதற்கு அவள் தான் காரணம் என்று அவளின் மனசாட்சி சொல்லவும் கற்பகத்திற்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது... எப்போதும் தன்னிடம் செல்லம் கொஞ்சும் இளைய மகன், திருமணத்திற்கு பின்பும் அப்படியே இருக்க வேண்டும் என அவள் எதிர்பார்த்தது என்னவோ உண்மை... ஆனால் அதற்காக அவன் இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்துக் கொள்வான் என அவள் நினைக்கவே இல்லை... முதல் முறையாக பாரதிக்காக அவளின் மனம் வருத்தப் பட்டது...!!!
உமாவிற்கு கற்பகத்தின் மீதும், விவேக்கின் மீதும் கோபம் கொப்பளித்தது! பாரதியிடம் கற்பகத்திற்காக விட்டுக் கொடுக்க பல முறை அறிவுரை சொன்னவள் அவள் தான்... ஆனால் இன்று நடந்தது அவளின் மொத்த எண்ணத்தையும் புரட்டிப் போட்டிருந்தது...
மனைவியின் அருகில் வந்த நிரஞ்சன், அவள் முகத்தில் இருந்து என்ன புரிந்துக் கொண்டானோ, வேண்டாம் எனபது போல தலையை அசைத்தான்...
உமா கோபத்துடன் அவனைப் பார்த்து முறைக்கவும்,