மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 44 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அஹல்யாவா? அவங்களுக்கு என்ன?” நர்ஸ் கேள்வியுடன் சத்யா சக்தி இருவரையுமே பார்த்தாள்!
“அஹல்யா டீச்சர் மேல டாக்டருக்கு என்ன கோபம்? என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் கிட்ட அவங்களை பத்தி தப்பா சொல்லி இருந்தார். அஹல்யா எங்களுக்கு தெரிஞ்சவங்க. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு வந்தோம்!”
நர்ஸ் மீண்டும் திரைகளை விலக்கி வைக்கும் வேலையை தொடர்ந்தாள்.
“உங்களுக்கும் அஹல்யாவை பிடிக்காது போலருக்கு சிஸ்டர்?” சத்யா மீண்டும் பேச்சுக் கொடுத்தாள்.
“அஹல்யா விஷயத்துல டாக்டர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. அவர் இப்போ மாறிப் போயிட்டார். அவர் வேலை செய்ற ஹாஸ்பிட்டல் அட்மின் அவரை மயக்கி வச்சிருக்கா. தப்பு தப்பா எது எதுவோ செய்துட்டு இருக்கார். இதெல்லாம் அவரோட மனைவிக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ, என்னவோ!”
“ஹாஸ்பிட்டல் அட்மின்னா பர்வீனையா சொல்றீங்க??”
“அவளை தான் சொல்றேன்! டாக்டர் கிருஷ்ணா கிட்ட நான் பத்து வருஷத்துக்கும் மேல வேலை பார்க்குறேன். அவர் இப்படி பட்டவர் கிடையாது. இரண்டு மூணு வருஷமா அந்த பொண்ணு சிநேகிதம் வந்ததுல இருந்து ரொம்ப மாறிப் போய் இருக்கார்!”
பர்வீனுக்கும் டாக்டர் கிருஷ்ணாவிற்கும் நடுவே வேறு லிங்க் இருக்கிறதா???? சத்யாவிற்கு தலையை சுற்றியது!!!
🌼🌸❀✿🌷
“ச்சே உலகத்துல நல்லவங்களே இல்லை!” சத்யா அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருந்தாள்!