பார்க்க போறாரு”
”என்னது காதலியா யாரது”
”தெரியாது தாத்தா ஏன் தாத்தா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்தீங்க”
”துரோகமா”
”பின்ன நானா உங்ககிட்ட எனக்கு துணையா இருங்கன்னு வந்தேன், எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு நானா கேட்டேன், ஏதோ எனக்கு வேலை கொடுத்தீங்க அந்த வேலையை நான் சரி வர செய்தேன் என் அப்பா அம்மா இறப்புக்கு காரணமான உங்க பேரனை எனக்கு கட்டிவைச்சீங்க, எல்லாம் சரி ஆனா அவர் மனசுல என்ன இருக்கு யார் இருக்கான்னு கூடவா பார்க்க மாட்டீங்க, ஏற்கனவே அப்பா அம்மா இறந்த துக்கம் இன்னும் என் மனசை விட்டு போகலை, இப்ப இன்னொரு பெண்ணை விரும்பற ஒருத்தரை நான் கல்யாணம் செய்துக்கிட்டு கஷ்டப்படறேன், இப்ப உங்களுக்கு சந்தோஷமா இதுக்கு நீங்க என்னை கொன்னிருக்கலாமே” என சொல்லி அழ தாத்தா இடிந்துப் போய் அமர்ந்துவிட்டார், எப்படி அவளுக்கு ஆறுதல் சொல்வதென தெரியாமல் தவித்தார்
மறுபக்கம் கோவலன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாதவியை தேடிச் சென்றான், வழியில் இருந்த சிக்னலில் சிக்கினான். அதே சிக்னலில் சிலம்பரசனும் இருந்தான், கோவலனது வண்டியையும் கோவலனையும் கண்டு திகைத்தான்
”காலையிலதானே இவனுக்கு கல்யாணம் ஆச்சி இப்ப எங்க போறான், எதுக்கு கோபமா இருக்கான் என்னவோ தப்பு நடந்திருக்கு இவனை பாலோ பண்ணா விசயம் தெரியும், அது நமக்கு சாதகமா இருந்தா இதை வைச்சே நான் பெரியாளாயிடுவேன்” என நினைத்தபடியே கோவலனின் வண்டியை பின்தொடர்ந்தான்.
கோவலனோ வருத்தமுடன் மாதவியின் வீட்டின் முன் காரை விட்டு இறங்கி உள்ளே செல்ல அதைக்கண்டு அதிர்ந்தான் சிலம்பு
”இது மாதவி வீடாச்சே, இங்க இந்த ராத்திரி நேரத்தில இவனுக்கு என்ன வேலை என்னவோ